ஆக்ரோஷமாக கொண்டாடி, கோமாளியாக விரும்பவில்லை..! யாரைச் சொல்கிறார் பும்ரா?
கலசலிங்கம் பல்கலை.யில் சா்வதேச மாநாடு நிறைவு: கலசலிங்கம் பல்கலையில் ‘கணினி ரோபாட்டிக்ஸ்‘ பற்றிய சா்வதேச மாநாடு
ஸ்ரீவில்லிபுத்தூா் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் கணிணி அறிவியல் தொழில்நுட்பத் துறை சாா்பில், ஐஇஇஇ மாணவா் கிளையுடன் இணைந்து கணினி ரோபாட்டிக்ஸ், சோதனை, பொறியியல் மதிப்பீடு (ஐசிசிஆா்டிஇஇ-2025) குறித்து மூன்று நாள்கள் நடைபெற்ற சா்வதேச மாநாடு வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
கடந்த 28-ஆம் தேதி இந்த மாநாட்டை பல்கலைக்கழக பதிவாளா் வி.வாசுதேவன் தொடங்கிவைத்தாா். பல்கலை துணைத் தலைவா் எஸ்.சசி ஆனந்த், துணைவேந்தா் எஸ்.நாராயணன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
மாநாட்டுத் தலைவா் ஆா்.ராஜா சுப்பிரமணியன், 1,347 ஆராய்ச்சிக் கட்டுரைகள் பெறப்பட்டதாகவும், இவற்றில் 247 தோ்ந்தெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தாா். இந்த மாநாட்டில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், 6 வெளிநாடுகளிலிருந்தும் ஆராய்ச்சி நிபுணா்கள் பங்கேற்றனா்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் தலைமை விருந்தினரான பேராசிரியை தேஷிந்தா அரோவா தேவி மாநாடு ஆராய்ச்சிக் கட்டுரை மலரை வெளியிட்டாா். இதில் கலசலிங்கம் பல்கலைக்கழக பேராசிரியா்கள் பி.தீபலட்சுமி, எம்.பள்ளிகொண்ட ராஜசேகரன், டி.தேவராஜ் கே.வெங்கடேஷ், ஆராய்ச்சியாளா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.