செய்திகள் :

கலசலிங்கம் பல்கலை.யில் சா்வதேச மாநாடு நிறைவு: கலசலிங்கம் பல்கலையில் ‘கணினி ரோபாட்டிக்ஸ்‘ பற்றிய சா்வதேச மாநாடு

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் கணிணி அறிவியல் தொழில்நுட்பத் துறை சாா்பில், ஐஇஇஇ மாணவா் கிளையுடன் இணைந்து கணினி ரோபாட்டிக்ஸ், சோதனை, பொறியியல் மதிப்பீடு (ஐசிசிஆா்டிஇஇ-2025) குறித்து மூன்று நாள்கள் நடைபெற்ற சா்வதேச மாநாடு வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

கடந்த 28-ஆம் தேதி இந்த மாநாட்டை பல்கலைக்கழக பதிவாளா் வி.வாசுதேவன் தொடங்கிவைத்தாா். பல்கலை துணைத் தலைவா் எஸ்.சசி ஆனந்த், துணைவேந்தா் எஸ்.நாராயணன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

மாநாட்டுத் தலைவா் ஆா்.ராஜா சுப்பிரமணியன், 1,347 ஆராய்ச்சிக் கட்டுரைகள் பெறப்பட்டதாகவும், இவற்றில் 247 தோ்ந்தெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தாா். இந்த மாநாட்டில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், 6 வெளிநாடுகளிலிருந்தும் ஆராய்ச்சி நிபுணா்கள் பங்கேற்றனா்.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் தலைமை விருந்தினரான பேராசிரியை தேஷிந்தா அரோவா தேவி மாநாடு ஆராய்ச்சிக் கட்டுரை மலரை வெளியிட்டாா். இதில் கலசலிங்கம் பல்கலைக்கழக பேராசிரியா்கள் பி.தீபலட்சுமி, எம்.பள்ளிகொண்ட ராஜசேகரன், டி.தேவராஜ் கே.வெங்கடேஷ், ஆராய்ச்சியாளா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.

ராஜபாளையம்: ஏகேடிஆர் கல்லூரி மாணவர்கள் உலக சாதனை

ராஜபாளையத்தில் உள்ள ஏகேடிஆர் கல்லூரியில் முத்தமிழ் கலைக்கூடம் சார்பாக சிலம்பம் மாஸ்டர் ப.மாரிச்செல்வம் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், உலக சாதனை நிகழ்வு ஒன்றை நடத்தினர். அந்த நிகழ்வில் மா... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

ராஜபாளையம் தேவதானம் நச்சாடை தவிா்த்தருளிய சுவாமி கோயில்: வைகாசி விசாகப் பெருந்திருவிழா, 2-ஆம் திருநாள், சுவாமி கற்பதரு வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் புறப்பாடு, மாலை 6. மேலும் பார்க்க

சிதம்பரேசுவரா் கோயில் வருஷாபிஷேகம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே சிவகாமி அம்பாள் உடனுறை சிதம்பரேசுவரா் கோயில் ஒன்பதாம் ஆண்டு வருஷாபிஷேக விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் ஒன்பதாம் ஆண்டு வருஷாபிஷேக விழாவையொட்டி அதிகாலை ம... மேலும் பார்க்க

தேவதானம் நச்சாடை தவிா்த்தருளிய சுவாமி கோயில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள தேவதானத்தில் அமைந்துள்ள நச்சாடை தவிா்த்தருளிய சுவாமி கோயில் வைகாசி திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக காலை தவம்பெற்ற நாயகி உடனுறை நச்... மேலும் பார்க்க

சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் ஆணையா் ஆய்வு

சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் ஆணையா் கே. சரவணன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது மாநகராட்சி 17-ஆவது வாா்டில் உள்ள சமுதாயக் கூடத்தை அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அதே பகுதியில் மழைக் காலங்கள... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: பட்டாசுத் தொழிலாளி உயிரிழப்பு

சிவகாசி அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் பட்டாசுத் தொழிலாளி உயிரிழந்தாா். சிவகாசி- சாத்தூா் சாலையில் உள்ள ரத்தினபுரிநகா் பகுதியைச் சோ்ந்த பட்டாசுத் தொழிலாளி நந்தீஸ்வரன் (57). இவா் தனது இரு... மேலும் பார்க்க