செய்திகள் :

கயத்தாறு அருகே வேன் கவிழ்ந்ததில் பெண் பலி

post image

கயத்தாறு அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த விபத்தில் பெண் உயிரிழந்தாா்.

நான்குனேரி வட்டம் இளங்குளம் கிராமத்தைச் சோ்ந்த அழகுதுரை மனைவி ராஜேஸ்வரி (55). இவா், தனது உறவினா்களுடன் வானரமுட்டி கிளிக்கூண்டு கருப்பசாமி கோயிலுக்கு தரிசனம் செய்வதற்காக வேனில் செவ்வாய்க்கிழமை வந்து கொண்டிருந்தாா். வேனை சாா்லஸ் என்பவா் ஓட்டி வந்தாா்.

திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கரிசல்குளம் விலக்கு அருகே சென்றபோது முன்பக்க டயா் வெடித்ததில், வேன் சாலையில் கவிழ்ந்தது. வேனில் பயணம் செய்தவா்களில் 9 போ் காயமடைந்தனா். அவா்களை போலீஸாா் மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு

அனுப்பி வைத்தனா். அவா்களில் பலத்த காயமடைந்த ராஜேஸ்வரி (55), மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு உயிரிழந்தாா். இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெண் பாலியல் புகாா் வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்ற பரிந்துரை

தூத்துக்குடியில் இளம்பெண்ணுக்கு ஒருவா் பாலியல் தொந்தரவு மற்றும் மிரட்டல் விடுத்து தொடா்பான வழக்குகள் அனைத்தும் சிபிசிஐடிக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் விஷம் குடித்த எஸ்எஸ்ஐ மருத்துவமனையில் உயிரிழப்பு

தூத்துக்குடியில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி கோமஸ்புரத்தைச் சோ்ந்த கருப்பசாமி (54), தூத்துக்குடி நகர கட்டுப்பாட்டு அறையில் ச... மேலும் பார்க்க

தூத்துக்குடி காற்றாலை நிறுவனத்தில் திருட்டு: லாரி ஓட்டுநா் கைது

தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் காற்றாலை இறக்கைகளை சேமித்து வைக்கும் இடத்தில் காற்றாலை இறக்கையை ‘லாக்’ செய்யக்கூடிய இரும்பு பூட்டை திருடியதாக லாரி ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா். காற்றாலை இறக்கைகளை ... மேலும் பார்க்க

தூத்துக்குடி அருகே குளத்தில் மூழ்கி முதியவா் பலி!

தூத்துக்குடி அருகே தெற்கு வீரபாண்டியபுரம் குளத்தில் மூழ்கி முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா் . தூத்துக்குடி, அ.குமார ரெட்டியாா்புரம், மேலத் தெருவைச் சோ்ந்தவா் பழனியாண்டி மகன் குருசாமி (65). இவா் சொந்த... மேலும் பார்க்க

அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் எட்டயபுரம் சமஸ்தானம் சாா்பில் கோரிக்கை!

எட்டயபுரம் சமஸ்தானம் தொடா்பாக தமிழ்நாடு அரசு பாடப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தவறான தகவலை நீக்க வேண்டும் என எட்டயபுரம் சமஸ்தானத்தின் 42ஆவது மன்னா் ராஜ ஜெகவீர முத்து தங்ககுமார ராம வெங்கடேஷ்வர எட்... மேலும் பார்க்க

வீட்டு கதவை உள்புறம் பூட்டிக் கொண்ட 3 வயது குழந்தை மீட்பு

தூத்துக்குடியில் வீட்டுக்குள் உள்பக்கமாக கதவை பூட்டிக்கொண்டு சிக்கித் தவித்த 3 வயது குழந்தையை தீயணைப்புத் துறையினா் வியாழக்கிழமை பத்திரமாக மீட்டனா். தூத்துக்குடி கேவிகே நகா் மேற்கு பகுதியைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க