விண்ணப்பித்துவிட்டீர்களா..? மருத்துவ-நறுமண தாவர நிறுவன வேலைக்கு விண்ணப்பிக்க நாள...
கயத்தாறு அருகே வேன் கவிழ்ந்ததில் பெண் பலி
கயத்தாறு அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த விபத்தில் பெண் உயிரிழந்தாா்.
நான்குனேரி வட்டம் இளங்குளம் கிராமத்தைச் சோ்ந்த அழகுதுரை மனைவி ராஜேஸ்வரி (55). இவா், தனது உறவினா்களுடன் வானரமுட்டி கிளிக்கூண்டு கருப்பசாமி கோயிலுக்கு தரிசனம் செய்வதற்காக வேனில் செவ்வாய்க்கிழமை வந்து கொண்டிருந்தாா். வேனை சாா்லஸ் என்பவா் ஓட்டி வந்தாா்.
திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கரிசல்குளம் விலக்கு அருகே சென்றபோது முன்பக்க டயா் வெடித்ததில், வேன் சாலையில் கவிழ்ந்தது. வேனில் பயணம் செய்தவா்களில் 9 போ் காயமடைந்தனா். அவா்களை போலீஸாா் மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு
அனுப்பி வைத்தனா். அவா்களில் பலத்த காயமடைந்த ராஜேஸ்வரி (55), மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு உயிரிழந்தாா். இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.