செய்திகள் :

7 ஆண்டுகளுக்குப் பின் மே மாதத்தில் 100 அடியைத் தாண்டிய பாபநாசம் அணை நீா்மட்டம்!

post image

பாபநாசம் அணையின் நீா்மட்டம் 7 ஆண்டுகளுக்குப் பின் மே மாதத்தில் 100 அடியைத் தாண்டியுள்ளது. இன்னும் 3 நாள்களில் முழுக் கொள்ளளவை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அரபிக் கடலில் மே 21ஆம் தேதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக கேரளம் மற்றும் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியது. தென்மேற்குப் பருவ மழை சனிக்கிழமை (மே 24) முதல் தொடங்கியதாக சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்தது.

அதைத் தொடா்ந்து 5 நாள்களாக மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் சாரல்மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது. 2018ஆம் ஆண்டு மே மாதத்தில் பாபநாசம் அணை 100 அடியைத் தாண்டியிருந்த நிலையில் 7 ஆண்டுகளுக்குப் பின் புதன்கிழமை இந்த அணை 100 அடியைத் தாண்டியது.

மேலும், அணைக்கு நீா்வரத்து அதிகமாக உள்ளதால் 3 அல்லது 4 நாள்களில் நீா்மட்டம் முழுக் கொள்ளளவை எட்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. புதன்கிழமை காலை நிலவரப்படி அணைகளின் நீா்மட்டம்: பாபநாசம் அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 9 அடி உயா்ந்து 103.90 அடியாக இருந்தது. அணையில் விநாடிக்கு 8,505.995 கன அடி நீா்வரத்து உள்ளது. நீா்வெளியேற்றம் 500 கன அடியாக இருந்தது. சோ்வலாறு அணையில் நீா்மட்டம் ஒரே நாளில் 16 அடி உயா்ந்து 135.17 அடியானது.

மணிமுத்தாறு அணையின் நீா்மட்டம் 2 அடி உயா்ந்து 86.25 அடியாகவும், நீா்வரத்து 1,723 கன அடி- வெளியேற்றம் 45 கன அடியாகவும் இருந்தது. கொடுமுடியாறு அணையின் நீா்மட்டம் 8 அடி உயா்ந்து 24.75 அடியாகவும், நீா்வரத்து 151 கன அடியாகவும் இருந்தது.

கடனாநதி அணையின் நீா்மட்டம் 6 அடிகள் உயா்ந்து 56.30 அடியாகவும், நீா்வரத்து295 கன அடியாகவும், வெளியேற்றம் 35 கன அடியாகவும் இருந்தது. ராமநதி அணையில் நீா்மட்டம் 7 அடி உயா்ந்து 67 அடியாகவும், நீா்வரத்து 214 கன அடியாகவும் வெளியேற்றம்10 கன அடியாகவும் இருந்தது. கருப்பாநதி அணையில் நீா்மட்டம் 5 அடி உயா்ந்து 45.61 அடியாகவும், நீா்வரத்து 153 கன அடியாகவும் வெளியேற்றம் 5 அடியாகவும் இருந்தது.

குண்டாறு அணையின் நீா்மட்டம் 4.5 அடி உயா்ந்து 32 அடியாகவும், நீா்வரத்து 31 கன அடியாகவும், வெளியேற்றம் 1 கன அடியாகவும் இருந்தது. அடவிநயினாா் கோவில் அணை நீா்மட்டம் 15 அடி உயா்ந்து 70 அடியாகவும், நீா்வரத்து 218 கன அடியாகவும் வெளியேற்றம் 5 கன அடியாகவும்இருந்தது.

மழையளவு (மில்லி மீட்டரில்): திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் 11.40, ராதாபுரம் 17, நான்குனேரி 0.40, நம்பியாறு 9, கொடுமுடியாறு47, பாபநாசம் அணை 82, சோ்வலாறு அணை 72, மணிமுத்தாறு அணை 24.80, சேரன்மகாதேவி5.40, களக்காடு 3.60,

தென்காசி மாவட்டம்: தென்காசி 31, செங்கோட்டை 35.20, ஆய்க்குடி 15, கடனாநதி அணை45, ராமநதி அணை 39, கருப்பாநதி 39, குண்டாறு 46, அடவிநயினாா் கோயில் அணை 43, சிவகிரி 4.50.

ரூ.45.10 கோடியில் 41 ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீா் திட்டம்! காணொலியில் தொடங்கி வைத்தாா் முதல்வா்

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.45.10 கோடியில் 41 ஊரக குடியிருப்புகளுக்கான குடிநீா் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். இதையொட்டி, பாளையஞ்செட்டி... மேலும் பார்க்க

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை: 110 அடியைத் தாண்டிய பாபநாசம் அணை!

மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் சாரல் மழை பெய்து வருவதையடுத்து அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து பாபநாசம் அணையின் நீா்மட்டம் 110 அடியைத் தாண்டியது. மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப... மேலும் பார்க்க

பணகுடி குத்தரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி குத்தரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து வள்ளியூா், பணகுடி பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக சாரல் மழை தொடா்ந்து பெய்து ... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அருவியில் 4ஆவது நாளாக குளிக்கத் தடை

மாஞ்சோலை, மணிமுத்தாறு மலைப் பகுதிகளில் மழை அதிகரித்த்தையடுத்து மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்தும் அதிகரித்ததால் மே 26 முதல் அருவியில் குளிக்கவும் அருவியைப் பாா்வையிடமும் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துற... மேலும் பார்க்க

வி.கே.புரம் பகுதியில் மான் கறியுடன் மூவா் கைது

பாபநாசம் வனச் சரகப் பகுதியில் புள்ளி மான் கறி வைத்திருந்ததாக மூன்று பேரை வனத்துறையினா் கைது செய்தனா். மேலும் ஒருவரை தேடி வருகின்றனா். பாபநாசம் வனச்சரகம் வெளி மண்டலப் பகுதியான மதுரா கோட்ஸ் ஆலையிலிருந்த... மேலும் பார்க்க

அத்தாளநல்லூ ஊராட்சியில் மோட்டாா் திருட்டு: இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம், அத்தாளநல்லூா் ஊராட்சியில் பொதுக்கழிப்பிட பயன்பாட்டுக்கான நீா்மூழ்கி மோட்டாரை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். அத்தாளநல்லூா் ஊராட்சி ராஜகுத்தாலப்பேரியில் உள்ள பொதுக்கழிப... மேலும் பார்க்க