செய்திகள் :

வேலூர்: சாலையோரத்தில் தோண்டப்பட்ட பள்ளம்; அச்சத்தில் வாகன ஓட்டிகள் - அலட்சியம் வேண்டாமே அதிகாரிகளே!

post image

வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு அருகே அமைந்திருக்கிறது, ஓங்கப்பாடி கிராமம். இந்த கிராமத்தின் அருகே வேலூரில் இருந்து ஒடுகத்தூர் செல்லும் சாலையின் ஓரத்தில் மிகப்பெரிய பள்ளம் தோண்டிப் போடப்பட்டிருக்கிறது. சாலையை ஒட்டியே இந்தப் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், விபத்து ஏற்படும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. கடந்த வாரத்தில் இந்த பள்ளத்தில் ஒரு டிராக்டர் சிக்கி விபத்துக்குள்ளான சம்பவமும் நிகழ்ந்துள்ளது. மேலும் இந்த பள்ளத்தில் தற்போது கழிவு நீரும், மழை நீரும் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பெரிய அசம்பாவிதம் ஏதும் ஏற்படுவதற்கு முன்பாகவே இந்தப் பள்ளத்தை உடனடியாக மூட வேண்டும் அல்லது உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். 

இது குறித்து நம்மிடம் பேசிய அப்பகுதி பொதுமக்கள், “ஓங்கப்பாடி கிராமத்தில் கல்வெர்ட் (culvert) அமைக்க சாலையின் ஓரத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. அதன் பிறகு கல்வெர்ட் அமைக்கும் பணி வேறு இடத்துக்கு மாற்றப்பட்டதால் இந்தப் பள்ளம் அப்படியே விடப்பட்டது. நாளடைவில் இந்தப் பள்ளம் பெரிய அளவில் மாறியது. இந்தப் பகுதி கழிவு நீர் தேங்கும் பகுதியாகவும் மாறியது. கடந்த வாரத்தில் இரவு நேரத்தில் ஒரு டிராக்டர் இந்தப் பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளானது. இந்தச் சாலையைக் கடக்கும் வாகன ஓட்டிகளும் மிகுந்த அச்சத்துடன் பயணிக்க வேண்டியதாக உள்ளது. எனவே இந்தப் பள்ளத்தை உடனடியாக மூட வேண்டும் அல்லது உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினர். 

இது குறித்து நெடுஞ்சாலைத்துறையின் அணைக்கட்டு வட்ட உதவி பொறியாளரிடம் கேட்டபோது, “ஓங்கப்பாடி கிராமத்தில் சாலையின் அருகில் ஏற்பட்ட பள்ளம் குறித்து தற்போதுதான் தகவல் கிடைத்தது. அந்தப் பள்ளத்தை உடனடியாக மூடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அந்தப் பகுதியின் சாலை ஆய்வாளரை (RI) தொடர்பு கொண்டு உடனடியாக அந்தப் பகுதிக்குச் சென்று உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கச் சொல்கிறேன்” என்று கூறினார். 

அதானி - ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரம்: `மாதபி மீது எந்தத் தவறும் இல்லை' - லோக்பால் தீர்ப்பு

ஹிண்டன்பர்க் அறிக்கை வெளிவந்தப் போது அதானி பெயர் அடிப்பட்ட அதே அளவுக்கு, முன்னாள் செபி தலைவர் மாதபி பூரி புச் பெயரும் அடிப்பட்டது. மதாபி பூரி புச்சும், அவரது கணவர் தவால் புச்சும் தங்களது சொந்த லாபத்தி... மேலும் பார்க்க

நாட்றம்பள்ளி: முக்கிய பேருந்து நிறுத்தம்; ஆனால் நிழற்குடை? - கோரிக்கை வைக்கும் பொதுமக்கள்!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள நாட்றம்பள்ளி பகுதியில், தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால், பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இப்பகு... மேலும் பார்க்க

Aadhar Card-ல் மாறும் கடைசிப் பெயர்; கடைசி நேரத்தில் ஏற்படும் குழப்பம் - தவிர்ப்பது எப்படி?!

வங்கி கணக்கில் எதாவது மாற்றம், டிக்கெட் பதிவு... எந்த இடத்திற்குச் சென்றாலும் முதலில் கேட்கப்படும் கேள்வி 'ஆதார் இருக்கிறதா?' என்பது தான். இன்று இந்திய மக்களின் வாழ்வில் ஆதார் இன்றியமையாத இடத்தைப் பிட... மேலும் பார்க்க

`வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய கடைசி தேதி ஜூலை 31 இல்ல!' - நீட்டிக்கப்பட்ட தேதி; காரணம் என்ன?

ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய ஜூலை 31-ம் தேதியே கடைசி நாள். ஆனால், இந்த ஆண்டு (2025) கடைசி நாளை செப்டம்பர் 15-ம் தேதிக்கு மாற்றியுள்ளது மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT).வருமான வர... மேலும் பார்க்க

வாணியம்பாடி: கழிவறையின் அவலநிலையைச் சுட்டிக்காட்டிய விகடன்; நடவடிக்கை எடுத்த நகராட்சி!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரம், தோல் தொழிற்சாலைகள் நிறைந்த நெரிசல் மிகுந்த நகராட்சி ஆகும் . பெருகிவரும் மக்கள்தொகை மற்றும் வாகனங்களால் வாணியம்பாடி பேருந்து நிலையம் எப்போதும் நெரிசல் மிகுந்த... மேலும் பார்க்க

உ.பி: மருத்துவர், செவிலியர், படுக்கைக்கூட இல்லை... அரசு மருத்துவமனையில் தரையில் நடந்த பிரசவம்!

பிரசவம் என்பது ஒரு பெண்ணுக்கு மறுபிறப்பு என்பார்கள். கர்ப்பிணி என்றாலே எல்லோருக்கும் இயற்கையாகவே மனதில் ஒரு அன்பும், பரிவும் ஏற்பட்டுவிடும். அதனால்தான் ஒவ்வொரு மாநில அரசும் கர்ப்பிணிகளுக்கென பல திட்டங... மேலும் பார்க்க