செய்திகள் :

நாட்றம்பள்ளி: முக்கிய பேருந்து நிறுத்தம்; ஆனால் நிழற்குடை? - கோரிக்கை வைக்கும் பொதுமக்கள்!

post image

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள நாட்றம்பள்ளி பகுதியில், தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால், பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இப்பகுதியில் நூற்றுக்கணக்கானோர் தினசரி பேருந்தில் பயணம் செய்கின்றனர். வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர் மற்றும் பிற ஊர்களுக்குச் செல்வதற்காகப் பயணிகள் இங்கு நின்று பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நாட்றம்பள்ளி பகுதியைச் சுற்றி அரசு ஆரம்பச் சுகாதார நிலையம், அரசுப் பள்ளிகள், வங்கி உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் அமைந்துள்ளன. இதனால் பொதுமக்கள், மாணவர்கள், முதியோர் ஆகியோர் இங்கு அதிக அளவில் வந்து செல்லும் நிலை உள்ளது. ஆனால் இவ்வளவு முக்கியம் வாய்ந்த இடத்தில் பேருந்து நிழற்குடை இல்லாததால், அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், வங்கி, மளிகை, காய்கறிக் கடை என பல்வேறு பணிகளுக்காக வரும் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர்கள், ``இந்த இடம் இரண்டு வருடங்களுக்கு மேலாக இப்படித்தான் உள்ளது. தேசிய நெடுஞ்சாலைப் பணிக்காகப் பயணியர் நிழற்குடை இடிக்கப்பட்டது. மீண்டும் இங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கப்படவில்லை. எந்த அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. நாங்களும் இந்த விவகாரம் குறித்துப் பல முறை எடுத்துக் கூறியுள்ளோம். ஆனால் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இந்தப் பகுதி முக்கிய வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள் நிற்கும் சந்திப்பாக இருப்பதால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி விரைந்து நிழற்குடையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

இது குறித்து அப்பகுதியில் பயணம் மேற்கொள்ளும் பொதுமக்களிடம் விசாரித்தபோது, ``பேருந்து நிறுத்தங்கள் இடிக்கப்பட்ட பிறகு, சில சமயங்களில் அரசுப் பேருந்துகள் முறையாக எங்கள் ஊரில் நிற்பதில்லை. அரசுப் பேருந்துகள் மட்டுமல்ல... தனியார் பேருந்துகள்கூட இப்பகுதியில் நிற்பதில்லை. கூட்டம் அதிகமாக இருந்தால் மட்டும் பேருந்துகள் எங்களை ஏற்றிச் செல்கின்றன. இரண்டு அல்லது மூன்று நபர்கள் இருந்தால் பேருந்து மாயமாகச் சென்று விடுகிறது.

நாங்கள்தான் இங்கு மழையிலும் வெயிலிலும் அல்லாடுகிறோம்... அதிகாரிகள் வந்து பார்த்தார்கள்... ஆனால் இதுவரை ஒன்றும் மாறவில்லை. போதாததற்கு, நெடுஞ்சாலையின் ஓரமே நிற்பதால், நாள்தோறும் பயந்து பயந்து உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் பயணம் மேற்கொண்டு வருகிறோம். பாதிப்பு ஏற்பட்ட பிறகு அதிரடி நடவடிக்கைகள் எடுக்காமல், அது ஏற்படுவதற்கு முன்பே உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுக்கின்றனர்.

அதானி - ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரம்: `மாதபி மீது எந்தத் தவறும் இல்லை' - லோக்பால் தீர்ப்பு

ஹிண்டன்பர்க் அறிக்கை வெளிவந்தப் போது அதானி பெயர் அடிப்பட்ட அதே அளவுக்கு, முன்னாள் செபி தலைவர் மாதபி பூரி புச் பெயரும் அடிப்பட்டது. மதாபி பூரி புச்சும், அவரது கணவர் தவால் புச்சும் தங்களது சொந்த லாபத்தி... மேலும் பார்க்க

வேலூர்: சாலையோரத்தில் தோண்டப்பட்ட பள்ளம்; அச்சத்தில் வாகன ஓட்டிகள் - அலட்சியம் வேண்டாமே அதிகாரிகளே!

வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு அருகே அமைந்திருக்கிறது, ஓங்கப்பாடி கிராமம். இந்த கிராமத்தின் அருகே வேலூரில் இருந்து ஒடுகத்தூர் செல்லும் சாலையின் ஓரத்தில் மிகப்பெரிய பள்ளம் தோண்டிப் போடப்பட்டிருக்கிறது.... மேலும் பார்க்க

Aadhar Card-ல் மாறும் கடைசிப் பெயர்; கடைசி நேரத்தில் ஏற்படும் குழப்பம் - தவிர்ப்பது எப்படி?!

வங்கி கணக்கில் எதாவது மாற்றம், டிக்கெட் பதிவு... எந்த இடத்திற்குச் சென்றாலும் முதலில் கேட்கப்படும் கேள்வி 'ஆதார் இருக்கிறதா?' என்பது தான். இன்று இந்திய மக்களின் வாழ்வில் ஆதார் இன்றியமையாத இடத்தைப் பிட... மேலும் பார்க்க

`வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய கடைசி தேதி ஜூலை 31 இல்ல!' - நீட்டிக்கப்பட்ட தேதி; காரணம் என்ன?

ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய ஜூலை 31-ம் தேதியே கடைசி நாள். ஆனால், இந்த ஆண்டு (2025) கடைசி நாளை செப்டம்பர் 15-ம் தேதிக்கு மாற்றியுள்ளது மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT).வருமான வர... மேலும் பார்க்க

வாணியம்பாடி: கழிவறையின் அவலநிலையைச் சுட்டிக்காட்டிய விகடன்; நடவடிக்கை எடுத்த நகராட்சி!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரம், தோல் தொழிற்சாலைகள் நிறைந்த நெரிசல் மிகுந்த நகராட்சி ஆகும் . பெருகிவரும் மக்கள்தொகை மற்றும் வாகனங்களால் வாணியம்பாடி பேருந்து நிலையம் எப்போதும் நெரிசல் மிகுந்த... மேலும் பார்க்க

உ.பி: மருத்துவர், செவிலியர், படுக்கைக்கூட இல்லை... அரசு மருத்துவமனையில் தரையில் நடந்த பிரசவம்!

பிரசவம் என்பது ஒரு பெண்ணுக்கு மறுபிறப்பு என்பார்கள். கர்ப்பிணி என்றாலே எல்லோருக்கும் இயற்கையாகவே மனதில் ஒரு அன்பும், பரிவும் ஏற்பட்டுவிடும். அதனால்தான் ஒவ்வொரு மாநில அரசும் கர்ப்பிணிகளுக்கென பல திட்டங... மேலும் பார்க்க