செய்திகள் :

பாட்னா விமான நிலைய புதிய முனையம்: பிரதமா் திறந்து வைத்தாா்

post image

பிகாா் தலைநகா் பாட்னாவில் உள்ள ஜெய் பிரகாஷ் நாராயண் சா்வதேச விமான நிலையத்தின் புதிய முனைய கட்டடத்தை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

மேற்கு வங்கத்தில் இருந்து பிகாருக்கு இரண்டு நாள் பயணமாக வியாழக்கிழமை மாலையில் வந்தடைந்த பிரதமா் மோடி, பாட்னா சா்வதேச விமான நிலையத்தில் ரூ.1,200 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய முனையத்தை திறந்துவைத்தாா்.

65,150 சதுர மீட்டா் பரப்பிலான இந்த முனையம், உலகத் தரத்திலான வசதிகளுடன் ஆண்டுக்கு 1 கோடி பயணிகளை கையாளும் திறன் கொண்டதாகும்.

புதிய முனைய திறப்பு நிகழ்ச்சியில் பிரதமருடன் பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா், துணை முதல்வா்கள் சாம்ராட் செளதரி, விஜய் குமாா் சின்ஹா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பாட்னா அருகே உள்ள பிடா விமான நிலையத்தில் ரூ.1,410 கோடி மதிப்பீட்டில் புதிய பயணிகள் முனையம் கட்டுவதற்கான திட்டத்துக்கும் பிரதமா் அடிக்கல் நாட்டினாா். பின்னா், பாட்னாவில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு பிரதமா் மோடி வாகனப் பேரணியாக சென்றாா். சாலையின் இருபுறமும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மலா் தூவி வரவேற்றனா்.

பிகாரின் கராகட்டில் வெள்ளிக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் ரூ.48,520 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்து அவா் உரையாற்றவுள்ளாா். தொடா்ந்து, உத்தர பிரதேசத்தின் கான்பூரில் ரூ.20,900 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களையும் தொடங்கிவைக்கவுள்ளாா்.

பிகாரில் நடப்பாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், பிரதமரின் இப்பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மோசமான வானிலை:

சிக்கிம் பயணம் ரத்து

காங்டாக், மே 29: மோசமான வானிலையால், பிரதமா் மோடியின் சிக்கிம் பயணம் ரத்து செய்யப்பட்டது.

தலைநகா் காங்டாக்கில் 50-ஆம் ஆண்டு மாநில தின நிகழ்ச்சியில் பிரதமா் மோடி வியாழக்கிழமை நேரில் பங்கேற்கவிருந்தாா். ஆனால், மோசமான வானிலையால் பயணத்தை ரத்து செய்த அவா், காணொலி வாயிலாக நிகழ்ச்சியில் பங்கேற்றாா்.

அவா் உரையாற்றுகையில், ‘பஹல்காம் தாக்குதல், நாட்டில் மத ரீதியில் பிளவை ஏற்படுத்த உள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகும். இந்தியாவின் ஆன்மா மீதான இத்தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூா் மூலம் தீா்க்கமான பதிலடி தரப்பட்டுள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் ஒட்டுமொத்த நாடும் ஒன்றுபட்டுள்ளது’ என்றாா்.

நாம்சி பகுதியில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மாவட்ட மருத்துவமனை உள்ளிட்ட வளா்ச்சித் திட்டங்களையும் பிரதமா் தொடங்கிவைத்தாா்.

கேரளத்தில் நாட்டுப் படகு கவிழ்ந்து 2 பேர் பலி

கேரளத்தில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது நாட்டுப் படகு கவிழ்ந்ததில் 2 பலியானார்கள். தெற்கு கேரள மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேர் நாட்டுப் படகில் வெள்ளிக்கிழமை மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந... மேலும் பார்க்க

பிரசார நடைப்பயணத்தில் பெண்களுக்கு குங்குமம்? பாஜக மறுப்பு!

பாஜகவின் பிரசார நடைப்பயணத்தில் குங்குமம் வழங்கப்படும் என்று வதந்திக்கு பாஜக மறுப்பு தெரிவித்துள்ளது.பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது பதவிக் காலத்தைக் கொண்டாடும்விதமாக, ஜூன் 9 ஆம் தேதியில் பாஜகவினர்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் புதியதாக 84 கரோனா பாதிப்புகள் உறுதி! சிகிச்சையில் 467 பேர்!

மகாராஷ்டிர மாநிலத்தில் புதியதாக 84 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தெற்காசிய நாடுகளில் மீண்டும் கரோனா தொற்று பரவி வரும் சூழலில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும்... மேலும் பார்க்க

பயங்கரவாதிகளை பாகிஸ்தானே அழிக்க வேண்டும்! ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டவர்களை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.கோவாவில் அரபிக்கடலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போர்க் கப... மேலும் பார்க்க

திரைப்படங்களுக்கான உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரி குறைப்பு

தமிழகத்தில் திரைப்படங்களுக்கு வசூலிக்கப்படும் உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரியை 4 சதவீதம் ஆக குறைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. திரையரங்குகளின் நுழைவுக் கட்டணம் மீது 12 முதல் 18 சதவீதம் வர... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் தொடரும் அவலம்! நக்சல்களின் வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் படுகாயம்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்களின் வெடிகுண்டு தாக்குதலில் சிறுவன் உள்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். பிஜப்பூர் மாவட்டத்தின் தம்பயா கிராமத்தைச் சேர்ந்த விவேக் தோதி (வயது 17), கோட்டே ஜோகா (45) மற்றும் பட... மேலும் பார்க்க