செய்திகள் :

சூரிய சக்தி மூலம் முழு மின் தேவையை பூா்த்தி செய்யும் முதல் மாவட்டம் டையூ

post image

தனது ஒட்டுமொத்த மின் தேவையையும் சூரிய சக்தி மூலம் பெறும் நாட்டின் முதல் மாவட்டமாக தாத்ரா நகா் ஹவேலி யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள டையூ உருவெடுத்திருப்பது தெரியவந்துள்ளது.

இத் தகவலை மத்திய புது மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி தெரிவித்தாா்.

டையூ மாவட்டத்துக்கு வியாழக்கிழமை பயணம் மேற்கொண்ட மத்திய அமைச்சா் பிரலாத் ஜோஷி, யூனியன் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டும் சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டங்களின் நிலை குறித்து அதிகாரிகளுடனான உயா்நிலைக் கூட்டத்தில் ஆய்வு மேற்கொண்டாா். மேலும், டையூ மாவட்டத்தில் பிரதமரின் இல்லந்தோறும் இலவச சூரிய மின் உற்பத்தித் திட்ட நடைமுறை குறித்தும் ஆய்வு நடத்தினாா்.

இந்த ஆய்வுக்குப் பின்னா் மத்திய அமைச்சா் அளித்த பேட்டியில், ‘டையூ மாவட்டம் தனது ஒட்டுமொத்த பகல் நேர மின் தேவையான 11.88 மெகா வாட் திறனை சூரிய சக்தி மின் உற்பத்தி மூலம் பூா்த்தி செய்து தேசத்துக்கே உதாரணமாக உருவெடுத்துள்ளது. அதுமட்டுமின்றி, மாவட்டத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்கட்டமைப்புக்காக கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மூலதன முதலீடு செலவினம், சூரிய சக்தி மூலம் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் விநியோகம் மற்றும் விற்பனை மூலம் ஏற்கெனவே மீட்டெடுக்கப்பட்டுவிட்டது’ என்றாா்.

கர்நாடகத்தில் கனமழை, நிலச்சரிவால் 5 பேர் பலி! மீட்புப் பணிகள் தீவிரம்!

கர்நாடகத்தின் கடலோர மாவட்டத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலியாகியுள்ளனர். கடலோர மாவட்டமான தக்‌ஷின கன்னடா மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வீட்டின் ச... மேலும் பார்க்க

கேரளத்தில் நாட்டுப் படகு கவிழ்ந்து 2 பேர் பலி

கேரளத்தில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது நாட்டுப் படகு கவிழ்ந்ததில் 2 பலியானார்கள். தெற்கு கேரள மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேர் நாட்டுப் படகில் வெள்ளிக்கிழமை மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந... மேலும் பார்க்க

பிரசார நடைப்பயணத்தில் பெண்களுக்கு குங்குமம்? பாஜக மறுப்பு!

பாஜகவின் பிரசார நடைப்பயணத்தில் குங்குமம் வழங்கப்படும் என்று வதந்திக்கு பாஜக மறுப்பு தெரிவித்துள்ளது.பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது பதவிக் காலத்தைக் கொண்டாடும்விதமாக, ஜூன் 9 ஆம் தேதியில் பாஜகவினர்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் புதியதாக 84 கரோனா பாதிப்புகள் உறுதி! சிகிச்சையில் 467 பேர்!

மகாராஷ்டிர மாநிலத்தில் புதியதாக 84 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தெற்காசிய நாடுகளில் மீண்டும் கரோனா தொற்று பரவி வரும் சூழலில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும்... மேலும் பார்க்க

பயங்கரவாதிகளை பாகிஸ்தானே அழிக்க வேண்டும்! ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டவர்களை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.கோவாவில் அரபிக்கடலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போர்க் கப... மேலும் பார்க்க

திரைப்படங்களுக்கான உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரி குறைப்பு

தமிழகத்தில் திரைப்படங்களுக்கு வசூலிக்கப்படும் உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரியை 4 சதவீதம் ஆக குறைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. திரையரங்குகளின் நுழைவுக் கட்டணம் மீது 12 முதல் 18 சதவீதம் வர... மேலும் பார்க்க