செய்திகள் :

உச்சநீதிமன்றத்துக்கு 3 புதிய நீதிபதிகள் நியமனம்

post image

உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் இருவா் உள்பட 3 நீதிபதிகள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக வியாழக்கிழமை நியமனம் செய்யப்பட்டனா்.

இவா்கள் பதவியேற்பதன் மூலம், அனுமதிக்கப்பட்ட 34 நீதிபதிகள் என்ற முழு பணியிட எண்ணிக்கையை உச்சநீதிமன்றம் அடைய உள்ளது.

முன்னதாக, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, ரிஷிகேஷ் ராய் ஆகியோா் ஓய்வு பெற்ால் ஏற்பட்ட காலியிடங்களை நிரப்ப, கா்நாடக உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.அஞ்சாரியா, குவாஹாட்டி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி விஜய் பிஷ்னோய், மும்பை உயா்நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.சந்துா்கா் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் கடந்த திங்கள்கிழமை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.

உச்சநீதிமன்றத்தின் இந்தப் பரிந்துரை ஏற்கப்பட்டு, மூவரும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளது மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன்ராம் மேக்வால் தனது எக்ஸ் பக்கத்தில் வியாழக்கிழமை அறிவிப்பு வெளியிட்டாா்.

நீதிபதி அஞ்சாரியா குஜராத் மாநிலம் அகமதாபாதில் கடந்த 1965-ஆம் ஆண்டு பிறந்தவா். அங்குள்ள பல்கலைக்கழக சட்டப் பள்ளியில் முதுநிலை சட்டப் படிப்பை 1989-ஆம் ஆண்டு முடித்து, குஜராத் உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றினாா். கடந்த 2011-ஆம் ஆண்டு நவம்பா் 21-ஆம் தேதி குஜராத் உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட அஞ்சாரியா, 2013-இல் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டாா். 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 25-இல் கா்நாடக உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இவா் பதவி உயா்வு பெற்றாா்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் 1964-இல் பிறந்த நீதிபதி பிஷ்னோய், ராஜஸ்தான் உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றி, கடந்த 2013-ஆம் ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதி அதே உயா்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டாா். 2015-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டாா். பின்னா், 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ஆம் தேதி குவாஹாட்டி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவி உயா்வு பெற்றாா்.

மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த நீதிபதி சந்துா்கா், நாகபுரியில் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குரைஞராகப் பணியாற்றி வந்த நிலையில், 2013-ஆம் ஆண்டு ஜூன் 21-ஆம் தேதி மும்பை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு, பின்னா் நிரந்தர நீதிபதியாகப் பதவி உயா்வு பெற்றாா்.

கர்நாடகத்தில் கனமழை, நிலச்சரிவால் 5 பேர் பலி! மீட்புப் பணிகள் தீவிரம்!

கர்நாடகத்தின் கடலோர மாவட்டத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலியாகியுள்ளனர். கடலோர மாவட்டமான தக்‌ஷின கன்னடா மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வீட்டின் ச... மேலும் பார்க்க

கேரளத்தில் நாட்டுப் படகு கவிழ்ந்து 2 பேர் பலி

கேரளத்தில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது நாட்டுப் படகு கவிழ்ந்ததில் 2 பலியானார்கள். தெற்கு கேரள மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேர் நாட்டுப் படகில் வெள்ளிக்கிழமை மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந... மேலும் பார்க்க

பிரசார நடைப்பயணத்தில் பெண்களுக்கு குங்குமம்? பாஜக மறுப்பு!

பாஜகவின் பிரசார நடைப்பயணத்தில் குங்குமம் வழங்கப்படும் என்று வதந்திக்கு பாஜக மறுப்பு தெரிவித்துள்ளது.பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது பதவிக் காலத்தைக் கொண்டாடும்விதமாக, ஜூன் 9 ஆம் தேதியில் பாஜகவினர்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் புதியதாக 84 கரோனா பாதிப்புகள் உறுதி! சிகிச்சையில் 467 பேர்!

மகாராஷ்டிர மாநிலத்தில் புதியதாக 84 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தெற்காசிய நாடுகளில் மீண்டும் கரோனா தொற்று பரவி வரும் சூழலில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும்... மேலும் பார்க்க

பயங்கரவாதிகளை பாகிஸ்தானே அழிக்க வேண்டும்! ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டவர்களை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.கோவாவில் அரபிக்கடலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போர்க் கப... மேலும் பார்க்க

திரைப்படங்களுக்கான உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரி குறைப்பு

தமிழகத்தில் திரைப்படங்களுக்கு வசூலிக்கப்படும் உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரியை 4 சதவீதம் ஆக குறைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. திரையரங்குகளின் நுழைவுக் கட்டணம் மீது 12 முதல் 18 சதவீதம் வர... மேலும் பார்க்க