செய்திகள் :

வாக்குச் சாவடி குழுக்களை வலுப்படுத்த வேண்டும்: அதிமுக மாவட்டச் செயலா்களுக்கு இபிஎஸ் அறிவுறுத்தல்

post image

வாக்குச் சாவடி குழுக்களை அமைத்து பேரவைத் தொகுதிகளில் கட்சி கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டுமென அதிமுக மாவட்டச் செயலா்களுக்கு கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தினாா்.

அதிமுக மாவட்டப் பொறுப்பாளா்கள், செயலா்கள் கூட்டம் வியாழக்கிழமை காலை மற்றும் மாலை என இரு வேளைகள் நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் இந்தக் கூட்டத்தில், மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகா், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூா், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம் மாவட்டங்களின் செயலா்கள், பொறுப்பாளா்கள் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி கே.பழனிசாமி, கட்சி வளா்ச்சிப் பணிகள் குறித்து, சட்டப் பேரவை பொதுத் தோ்தல் பணிகளை விரைந்து மேற்கொள்வது பற்றியும் விரிவாக ஆலோசித்ததாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதியிலும் வாக்குச் சாவடி குழுக்களை வலுப்படுத்த வேண்டுமென மாவட்டச் செயலா்கள், பொறுப்பாளா்களை எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தியுள்ளாா். கூட்டத்தில் அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன், துணை பொதுச் செயலா்கள், அமைப்புச் செயலா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.

பாமக அலுவலக முகவரியை மாற்றிய அன்புமணி

பாமக அலுவலகத்தை சென்னை தேனாம்பேட்டையில் இருந்து தி.நகருக்கு அன்புமணி மாற்றியுள்ளார். பாமகவினருக்கு வழங்கப்பட்ட உறுப்பினர் படிவத்தில் கட்சி அலுவலக புதிய முகவரி இடம் பெற்றுள்ளது. அதன்படி, படிவத்தில் தேன... மேலும் பார்க்க

தூத்துக்குடிக்கு ஜூன் 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

திருச்செந்தூர் முருகன் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஜூன் 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலி... மேலும் பார்க்க

தங்க நகைக் கடன்களுக்கான பழைய நடைமுறையையே தொடர வேண்டும்- இபிஎஸ் வலியுறுத்தல்

தங்க நகைக் கடன்களுக்கான பழைய நடைமுறையையே ரிசர்வ் வங்கி தொடர வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், மத்திய நிதியமைச்சர் நிர... மேலும் பார்க்க

என்னை நீக்கும் அதிகாரம் பொதுக்குழுவுக்கே உண்டு; யாருக்கும் இல்லை: அன்புமணி

என்னை நீக்க பொதுக்குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை என்று பாமக தலைவர் அன்புமணி கூறியிருக்கிறார்.மேலும், கடந்த 2019ஆம் ஆண்டிலேயே அன்புமணி முதல்வர் எனும் பிரசாரத்தை செய்... மேலும் பார்க்க

நகைக்கடன் விதிகள்: இனி மாநிலங்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும்: முதல்வர்

நகைக்கடன் விதிகள் போன்ற மக்கள் சார்ந்த விஷயங்களை இனி மாநிலங்களுடன் கலந்தாலோசித்த பிறகே முடிவெடுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தங்க நகைக் கடன் வழங்குவது தொடர்பாக வங்கிகள் ம... மேலும் பார்க்க

பாமக நிர்வாகிகளுக்கு 3 வாரங்கள் கெடு: அன்புமணி

சென்னை: பாமக அடுத்தகட்டத்துக்குச் செல்ல நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருக்கிறார்.இன்னும் 10 மாதங்களில் தேர்தல் வருகிறது. உறுப்பினர் அடையாள அட்டை... மேலும் பார்க்க