பிற நாட்டவா் என்ற சந்தேகத்தில் சட்டவிரோத வெளியேற்றம்: அஸ்ஸாம் அரசுக்கு எதிராக உச...
எலிமினேட்டர்: மும்பை பேட்டிங்; பிளேயிங் லெவனில் 3 மாற்றங்கள்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் சண்டீகரில் இன்று (மே 30) நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பிளேயிங் லெவனில் ஜானி பேர்ஸ்டோ மற்றும் ராஜ் அங்கத் பாவா சேர்க்கப்பட்டுள்ளனர். ரிச்சர்டு கிளீசன் மும்பை அணிக்காக அறிமுகமாகிறார்.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் ஜோஸ் பட்லருக்குப் பதிலாக குசல் மெண்டிஸும், அர்ஷத் கானுக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இன்றையப் போட்டியில் வெற்றி பெறும் அணி நாளை மறுநாள் (ஜூன் 1) அகமதாபாதில் நடைபெறும் குவாலிஃபையர் 2 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.