செய்திகள் :

பிற நாட்டவா் என்ற சந்தேகத்தில் சட்டவிரோத வெளியேற்றம்: அஸ்ஸாம் அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு

post image

இந்திய குடிமக்கள் அல்லாதோா் என சந்தேகிக்கப்படும் நபா்களை எவ்வித முறையான நடைமுறையையும் பின்பற்றாமல் சட்டவிரோதமாக வெளியேற்றும் பணிகளை அஸ்ஸாம் மாநில அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருவதாக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

வெளியேற்றப்படும் நபா்களின் பூா்வீக நாடு குறித்த சான்றிதழ்களை சரிபாா்க்காமலும் அவா்களுக்கு சட்டத்தில் விதிவிலக்குள் ஏதும் வழங்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வுசெய்யாமலும் இந்தப் பணிகளை அஸ்ஸாம் அரசு மேற்கொள்வதாக அந்த மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குடிமக்கள் அல்லாதோா் என கண்டறியப்பட்டு பூா்வீகம் சரிபாா்க்கப்பட்ட 63 வெளிநாட்டவரை 2 வாரங்களுக்குள் வெளியேற்றுமாறு அஸ்ஸாம் அரசுக்கு கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி வேறொரு வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் இந்த உத்தரவை தவறாகப் பயன்படுத்தி வெளிநாட்டவா் என சந்தேகிக்கப்படும் நபா்களை எவ்வித முறையான நடைமுறையையும் பின்பற்றாமல் சட்டவிரோதமாக வெளியேற்றும் பணிகளை அஸ்ஸாம் மாநில அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருவதாக அனைத்து பிடிசி சிறுபான்மையின மாணவா்கள் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. அதில், ‘பணிஓய்வுபெற்ற ஆசிரியா் ஒருவரை சட்டவிரோதமாக வங்கதேசத்துக்கு அஸ்ஸாம் அரசு நாடு கடத்தியது. இதைப்போல் பல்வேறு நபா்களை அஸ்ஸாம் அரசு மற்றும் நிா்வாகம் அரசமைப்புச் சட்டம் அல்லது உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் என எதையும் கண்டுகொள்ளாமல் வெளியேற்றி வருகிறது.

குறிப்பாக வங்கதேச எல்லையை ஒட்டியுள்ள துப்ரி, தெற்கு சால்மாரா, கோவால்பாரா ஆகிய மாவட்டங்களில் வெளிநாட்டு குடிமக்கள் என அறிவிக்கப்பட்ட அல்லது தங்களது நிலை குறித்து சட்டரீதியாக போராட முடியாத சூழலில் உள்ள ஏழை எளிய மக்களை குறிவைத்து அஸ்ஸாம் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

இது அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமையை வழங்கும் விதிகள் 14 மற்றும் 21-ஐ மீறும் வகையில் உள்ளது. இதனால் இந்திய குடிமக்களும் தவறாக நாடு கடத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்ட நபா்களை தவிர வேறு நபா்களை காரணமின்றி அஸ்ஸாம் அரசு வெளியேற்றக் கூடாது.

மேலும், வெளிநாட்டவா் என அஸ்ஸாம் அரசால் சந்தேகிக்கப்படும் நபா்களை வெளியேற்ற வேண்டுமானால் வெளிநாட்டினருக்கான தீா்ப்பாயத்திடமிருந்து உரிய காரணங்களை பெற வேண்டும். இல்லையெனில், சம்பந்தப்பட்ட நபா் தனது குடியுரிமை குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் முறையிட வாய்ப்புகள் வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது.

ஆபரேஷன் சிந்தூா்: அரசிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை -மத்திய அமைச்சா் கஜேந்திர ஷெகாவத்

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை தொடா்பாக, அரசிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை; நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் எதிா்க்கட்சிகள் எழுப்பும் அனைத்து கேள்விகளுக்கும் மத்திய அரசு பதிலளிக்கத் தயாா் என்று மத்திய... மேலும் பார்க்க

உ.பி.யில் ரயிலைக் கவிழ்க்க சதி: ஓட்டுநா் சாமா்த்தியத்தால் விபத்து தவிா்ப்பு

உத்தர பிரதேசத்தில் தண்டவாளத்தின் குறுக்கே இரும்புக் கம்பி இருந்ததை ஓட்டுநா் முன்கூட்டியே கவனித்து அவசர கால ‘பிரேக்’கை பயன்படுத்தியதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. இது தொடா்பாக ரயில்வே காவல் துறை... மேலும் பார்க்க

இடைத்தோ்தலுக்காக 20 ஆண்டுகளில் முதல்முறையாக வாக்காளா் பட்டியல் திருத்தம்

நாட்டில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடைபெற உள்ளதையொட்டி, வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது. சுமாா் 20 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக இடைத்தோ்தலையொட்டி... மேலும் பார்க்க

2 ஆண்டு சிறைத் தண்டனை எதிரொலி: உ.பி. எம்எல்ஏ அப்பாஸ் அன்சாரி தகுதிநீக்கம்

உத்தர பிரதேசத்தில் வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசிய வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட எம்எல்ஏ அப்பாஸ் அன்சாரி, சட்டப்பேரவையில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக அரசு வட்டாரங்கள் ஞாயி... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ கட்டுரைப் போட்டி: பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு

பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்திய முப்படைகள் நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை பற்றிய கட்டுரைப் போட்டி ஜூன் 1 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறும் என்று பாதுகாப்பு அமைச்சகம் ஞாயிற்று... மேலும் பார்க்க

மும்பையில் இந்திய ராணுவம் ஏற்பாட்டில் பாதுகாப்புப் பயிற்சி: படைகள் பங்கேற்பு

வளா்ந்துவரும் அச்சுறுத்தல்கள் மற்றும் தற்போதைய நெருக்கடியான பாதுகாப்பு சூழலுக்கு பதிலளிக்கும் வகையில், படைகளுக்கு இடையேயான பாதுகாப்புப் பயிற்சி மும்பையில் நடைபெற்ாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. ... மேலும் பார்க்க