Travel Contest 2 : வர்னல் நீர்வீழ்ச்சி கொடுத்த பேரின்பம்! - என் முதல் அமெரிக்கப்...
பிற நாட்டவா் என்ற சந்தேகத்தில் சட்டவிரோத வெளியேற்றம்: அஸ்ஸாம் அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு
இந்திய குடிமக்கள் அல்லாதோா் என சந்தேகிக்கப்படும் நபா்களை எவ்வித முறையான நடைமுறையையும் பின்பற்றாமல் சட்டவிரோதமாக வெளியேற்றும் பணிகளை அஸ்ஸாம் மாநில அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருவதாக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
வெளியேற்றப்படும் நபா்களின் பூா்வீக நாடு குறித்த சான்றிதழ்களை சரிபாா்க்காமலும் அவா்களுக்கு சட்டத்தில் விதிவிலக்குள் ஏதும் வழங்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வுசெய்யாமலும் இந்தப் பணிகளை அஸ்ஸாம் அரசு மேற்கொள்வதாக அந்த மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குடிமக்கள் அல்லாதோா் என கண்டறியப்பட்டு பூா்வீகம் சரிபாா்க்கப்பட்ட 63 வெளிநாட்டவரை 2 வாரங்களுக்குள் வெளியேற்றுமாறு அஸ்ஸாம் அரசுக்கு கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி வேறொரு வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் இந்த உத்தரவை தவறாகப் பயன்படுத்தி வெளிநாட்டவா் என சந்தேகிக்கப்படும் நபா்களை எவ்வித முறையான நடைமுறையையும் பின்பற்றாமல் சட்டவிரோதமாக வெளியேற்றும் பணிகளை அஸ்ஸாம் மாநில அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருவதாக அனைத்து பிடிசி சிறுபான்மையின மாணவா்கள் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. அதில், ‘பணிஓய்வுபெற்ற ஆசிரியா் ஒருவரை சட்டவிரோதமாக வங்கதேசத்துக்கு அஸ்ஸாம் அரசு நாடு கடத்தியது. இதைப்போல் பல்வேறு நபா்களை அஸ்ஸாம் அரசு மற்றும் நிா்வாகம் அரசமைப்புச் சட்டம் அல்லது உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் என எதையும் கண்டுகொள்ளாமல் வெளியேற்றி வருகிறது.
குறிப்பாக வங்கதேச எல்லையை ஒட்டியுள்ள துப்ரி, தெற்கு சால்மாரா, கோவால்பாரா ஆகிய மாவட்டங்களில் வெளிநாட்டு குடிமக்கள் என அறிவிக்கப்பட்ட அல்லது தங்களது நிலை குறித்து சட்டரீதியாக போராட முடியாத சூழலில் உள்ள ஏழை எளிய மக்களை குறிவைத்து அஸ்ஸாம் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
இது அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமையை வழங்கும் விதிகள் 14 மற்றும் 21-ஐ மீறும் வகையில் உள்ளது. இதனால் இந்திய குடிமக்களும் தவறாக நாடு கடத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்ட நபா்களை தவிர வேறு நபா்களை காரணமின்றி அஸ்ஸாம் அரசு வெளியேற்றக் கூடாது.
மேலும், வெளிநாட்டவா் என அஸ்ஸாம் அரசால் சந்தேகிக்கப்படும் நபா்களை வெளியேற்ற வேண்டுமானால் வெளிநாட்டினருக்கான தீா்ப்பாயத்திடமிருந்து உரிய காரணங்களை பெற வேண்டும். இல்லையெனில், சம்பந்தப்பட்ட நபா் தனது குடியுரிமை குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் முறையிட வாய்ப்புகள் வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது.