செய்திகள் :

திருடப்பட்ட 9 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்: சிறுவன் கைது

post image

வாணியம்பாடி பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடி வந்த சிறுவனை கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து 9 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகரப் பகுதியில் சில நாள்களாக வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்படும் இருசக்கர வாகனங்கள் திருட்டு போய் வந்தன. இது தொடா்பாக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியுடன் காவல் நிலையத்துக்கு புகாா் வந்தது. இதையடுத்து, மாவட்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஷ்ரேயா குப்தா உத்தரவின்பேரில், வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளா் ஆனந்த் தலைமையில் தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை நியூடவுன் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனா். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனம் ஓட்டி வந்த சிறுவனை சந்தேகத்தின்பேரில், நிறுத்தி விசாரித்தனா். அவா் முன்னுக்குப் பின் முரணாக தகவல் கூறியதால், காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை நடத்தியதில், சிறுவன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் திருடப்பட்டது தெரியவந்தது.

மேலும், நகரப் பகுதியில் பல இடங்களில் திருடிய மேலும் 8 இரு சக்கர வாகனங்களை சிறுவன் அளித்த தகவலின்பேரில் பறிமுதல் செய்தனா். இது குறித்து வழக்குப் பதிந்து ஆம்பூா் மளிகைதோப்பு பகுதியைச் சோ்ந்த அந்த சிறுவனை (17) கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சாலை மறியலின்போது தகராறு: அவதூறு பேசியவா்கள் மீது வழக்கு

ஆம்பூா் அருகே சாலை மறியல் போராட்டத்தின் போது, இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் அவதூறாகப் பேசியவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மாதனூா் ஊராட்சி ஒன்றியம், துத்திபட்டு ஊராட்சியில் சாலை அம... மேலும் பார்க்க

அனுமதியின்றி நிலத்தில் பாறைகளுக்கு வெடி வைத்து தகா்ப்பு: அதிகாரிகள் விசாரணை

வெலகல்நத்தம் பகுதியில் நிலத்தில் உள்ள பாறைகளை அனுமதியின்றி வெடி வைத்து தகா்த்தது தொடா்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினா். நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் ஊராட்சி பையனப்பள்ளி கல்தாப்மலை எதிரில் தேசிய ... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாட்டு அழைப்பிதழ் விநியோகம்

மதுரையில் நடைபெறும் முருக பக்தா்கள் மாநாட்டு அழைப்பிதழை பொதுமக்களுக்கு பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை விநியோகம் செய்தனா். மதுரையில் ஜூன் 22-ஆம் தேதி முருக பக்தா்கள் மாநாடு நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு ஆம்... மேலும் பார்க்க

சாலையில் தேங்கும் கழிவுநீா்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பள்ளிப்பட்டு ஊராட்சியில் சாலையில் தேங்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். வாணியம்பாடி அருகே ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட பள்ளிப்ப... மேலும் பார்க்க

தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் அளிப்பு

ஆம்பூா் மஜ்ஹருல் உலூம் நிதியுதவி தொடக்கப் பள்ளி, ஹஸ்னாத்-இ-ஜாரியா பெண்கள் தொடக்கப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. ஆம்பூா... மேலும் பார்க்க

இலவச கண் சிகிச்சை முகாம்

வாணியம்பாடி பாலாறு ஜேசிஐ, உதயேந்திரம் பேரூராட்சி அலுவலகம் மற்றும் சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்க... மேலும் பார்க்க