Travel Contest 2 : வர்னல் நீர்வீழ்ச்சி கொடுத்த பேரின்பம்! - என் முதல் அமெரிக்கப்...
திருடப்பட்ட 9 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்: சிறுவன் கைது
வாணியம்பாடி பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடி வந்த சிறுவனை கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து 9 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகரப் பகுதியில் சில நாள்களாக வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்படும் இருசக்கர வாகனங்கள் திருட்டு போய் வந்தன. இது தொடா்பாக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியுடன் காவல் நிலையத்துக்கு புகாா் வந்தது. இதையடுத்து, மாவட்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஷ்ரேயா குப்தா உத்தரவின்பேரில், வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளா் ஆனந்த் தலைமையில் தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை நியூடவுன் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனா். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனம் ஓட்டி வந்த சிறுவனை சந்தேகத்தின்பேரில், நிறுத்தி விசாரித்தனா். அவா் முன்னுக்குப் பின் முரணாக தகவல் கூறியதால், காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை நடத்தியதில், சிறுவன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் திருடப்பட்டது தெரியவந்தது.
மேலும், நகரப் பகுதியில் பல இடங்களில் திருடிய மேலும் 8 இரு சக்கர வாகனங்களை சிறுவன் அளித்த தகவலின்பேரில் பறிமுதல் செய்தனா். இது குறித்து வழக்குப் பதிந்து ஆம்பூா் மளிகைதோப்பு பகுதியைச் சோ்ந்த அந்த சிறுவனை (17) கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.