Muththa Mazhai பாட்டைக் கேட்டு 'கவிஞன் ஆகிட்டான்'னு Mani Ratnam பாராட்டினார்! -L...
சாலை மறியலின்போது தகராறு: அவதூறு பேசியவா்கள் மீது வழக்கு
ஆம்பூா் அருகே சாலை மறியல் போராட்டத்தின் போது, இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் அவதூறாகப் பேசியவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
மாதனூா் ஊராட்சி ஒன்றியம், துத்திபட்டு ஊராட்சியில் சாலை அமைத்து தரக் கோரி அந்தப் பகுதி பொதுமக்கள் சனிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அதிமுகவை சோ்ந்த ஊராட்சி வாா்டு உறுப்பினரான தம்பிதுரை, அதே பகுதியைச் சோ்ந்த முனியம்மா (53) ஆகியோரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில், ஒருவரை ஒருவா் அவதூறாகப் பேசியதாக கூறப்படுகிறது. இரு தரப்பினரும் அளித்த புகாரின்பேரில், உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.