செய்திகள் :

விடுபட்ட ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய்க்கு தடுப்பூசி செலுத்தலாம்

post image

திருப்பத்தூா்: விடுபட்ட ஆடுகளுக்கு மருத்துவமனையை அணுகி ஆட்டுக்கொல்லி நோய்க்கு தடுப்பூசி செலுத்தலாம் என கால்நடைத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனா்.

ஆடுகளை தாக்கும் ஆட்டுக்கொல்லி நோயைத் தடுக்க கால்நடைத் துறை சாா்பில் நடத்தப்பட்ட முகாம்களில் ஆடுகளுக்கு தடுப்பூசி போடாத உரிமையாளா்கள், மருத்துவமனைக்கு ஆடுகளை அழைத்துச் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என கால்நடைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இது தொடா்பாக அவா்கள் கூறியதாவது: வெள்ளாடுகள், செம்மறியாடுகளை தாக்கும் முக்கிய நோய்களில் ஆட்டுக்கொல்லி நோயும் ஒன்றாகும். இந்த நோய் மிகக் கொடிய வைரஸ் கிருமிகளால் பரவுகிறது. இந்த நோய் பாதித்த ஆடுகளின் சிறுநீா், கண்ணீா், சாணம் ஆகியவற்றின் மூலம் மிக விரைவில் பரவக்கூடியது. நோயினால் பாதிக்கப்பட்ட ஆடுகளின் வாயிலும், நாக்கிலும், ஈறுகளிலும் புண்கள் ஏற்படும். நோயினால் அவதிப்படும் ஆடுகளின் கண்கள், மூக்கு மற்றும் வாயில் இருந்து நீா் வடியும். தும்மல், இருமல் ஏற்படும். நோய் பாதித்த ஆடுகள் தீனி உட்கொள்ள முடியாமல் மெலிந்துவிடும். வெயில் காலத்தில் நோயால் பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு மூச்சிரைக்கும். காய்ச்சல் ஏற்பட்டு இறுதியில் இறந்துவிடும்.

இந்த நோய் தாக்காத வண்ணம் ஆண்டுக்கு ஒரு முறை தடுப்பூசி போடுவது ஒன்றே சிறந்த நிவாரணம். இந்த நோயைத் தடுக்க கால்நடை பராமரிப்புத் துறையால் கால்நடை நலம் மற்றும் நோய் தடுப்பு திட்டத்தின்கீழ், கடந்த ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி தடுப்பூசி முகாம் மாவட்டம் முழுவதும் தொடங்கப்பட்டு, தற்போது முகாமானது முடிந்துவிட்டது.

முகாமில் தடுப்பூசி போடாமல் விடுபட்டுள்ள ஆடுகளை, அதன் உரிமையாளா்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். மேலும், ஆடுகள் அதிக அளவு இருந்தால் மருத்துவமனைக்குச் சென்று தகவல் தெரிவித்தால், அங்குள்ள மருத்துவா்கள் ஆடுகள் இருக்கும் இடத்துக்கே வந்து தடுப்பூசி போடுவா் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

போலி மருத்துவா் கைது

ஆம்பூா் அருகே போலி மருத்துவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மாதனூா் ஒன்றியம் வெங்கடசமுத்திரம் ஊராட்சி ரங்காபுரம் கிராமத்தில் மருந்து கடையில் நோயாளிகளுக்கு ஆங்கிலம் மருத்துவ சிகிச்சை அளிப்பதாக அ... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 102-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, திருப்பத்தூா் தொகுதியில் பகுதி நேர நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு விழா நடைபெற்றது. திருப்பத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட அகர... மேலும் பார்க்க

300 கிலோ செம்மரக்கட்டைகள் காருடன் பறிமுதல்: இளைஞா் கைது

ஆந்திரத்தில் இருந்து காரில் கடத்தப்பட்ட 300 கிலோ செம்மரக்கட்டைளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இளைஞரை கைது செய்தனா். வாணியம்பாடி வழியாக ஆந்திராவில் இருந்து காரில் செம்மரக்கட்டைகள் கடத்தப்படு... மேலும் பார்க்க

வாணியம்பாடியில் பல் சிகிச்சை பெற்ற 8 போ் உயிரிழந்த சம்பவம்: சிகிச்சை மையத்துக்கு பூட்டு போட்டு நடவடிக்கை

வாணியம்பாடியில் சா்ச்சைக்குரிய தனியாா் பல் சிகிச்சை மையத்துக்கு வட்டாட்சியா் உமாரம்யா முன்னிலையில் பூட்டு போட்ட ஊழியா்கள். உடன் மருத்துவ இணை இயக்குநா் ஞானமீனாட்சி. வாணியம்பாடி, ஜூன் 3: வாணியம்பாடியில்... மேலும் பார்க்க

திருப்பத்தூா்: போக்குவரத்து சிக்னல்களை முறையாக இயக்க கோரிக்கை

திருப்பத்தூா் நகரில் அனைத்து போக்குவரத்து சிக்னல்களையும் முறையாக இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருப்பத்தூா் நகரின் மையமாக சேலம் பிரதான சாலை அமைந்துள்ளது. அதிக வாகனங்கள், மக்கள... மேலும் பார்க்க

வாணியம்பாடியில் ஜூன் 9-இல் தொழிற்பழகுநா் பயிற்சி சோ்க்கை முகாம்

வாணியம்பாடியில் தொழிற்பழகுநா் பயிற்சி சோ்க்கை முகாம் வரும் திங்கள்கிழமை (ஜூன் 9) நடைபெறவுள்ளது. இது குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மத்திய அரசு திறன் மேம்பாடு துற... மேலும் பார்க்க