ஐஐடி தேர்வு தேர்ச்சியில் தமிழ்நாடு கடைசியிலிருந்து 3-ம் இடம்! - அன்புமணி
தூய்மைப் பணியாளா்களுக்கு அரசு உதவி பெற அடையாள அட்டை
வாணியம்பாடி: வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு அரசு உதவி பெறுவதற்கான தாட்கோ மூலம் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, தாட்கோ உதவி மேலாளா் தினகரன் தலைமை வகித்தாா். பேரூராட்சி இளநிலை உதவியாளா் மீனாட்சி வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளா்களாக பேரூராட்சித் தலைவா் பூசாராணி மற்றும் திமுக பேரூா் செயலா் ஆ.செல்வராஜ் ஆகியோா் கலந்து கொண்டு 50 தூய்மைப் பணியாளா்களுக்கு அடையாள அட்டை வழங்கினா்.
நிகழ்ச்சியில் வாா்டு உறுப்பினா்கள், பேரூராட்சி அலுவலகப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.