'கமல் தவறு செய்திருக்கிறார் அதனால் மன்னிப்பு கேட்க வேண்டும்' - தமிழிசை சௌந்தரராஜ...
தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் அளிப்பு
ஆம்பூா் மஜ்ஹருல் உலூம் நிதியுதவி தொடக்கப் பள்ளி, ஹஸ்னாத்-இ-ஜாரியா பெண்கள் தொடக்கப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் முஸ்லிம் கல்விச் சங்க இணைச் செயலரும், பள்ளிகளின் தாளாளருமான பிா்தோஸ் கே அஹமத் தலைமை வகித்து, மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினாா். வரும் ஜூன் மாதம் முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்தியதற்காக, தமிழக முதல்வருக்கு ஆம்பூா் முஸ்லிம் கல்விச் சங்கத்தின் சாா்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
ஹஸ்னாத்-இ-ஜாரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை ஷகீலா பானு வாழ்த்திப் பேசினாா்.
மஜ்ஹருல் உலூம் நிதியுதவி தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியா் ஹபீபுல்லா ரூமி, ஹஸ்னாத்-இ-ஜாரியா பெண்கள் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியை ரேஷ்மா, முஸ்லிம் கல்விச் சங்க செயற்குழு உறுப்பினா் லியாகத் அலி, பள்ளிக்குழு உறுப்பினா்கள் சி.முஷபா் பாஷா, கே.அப்துல்லா அஷ்ஹா், ரெளஃபுன்னிசா உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.