செய்திகள் :

சாலையில் தேங்கும் கழிவுநீா்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

post image

பள்ளிப்பட்டு ஊராட்சியில் சாலையில் தேங்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வாணியம்பாடி அருகே ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட பள்ளிப்பட்டு ஊராட்சி மாரியம்மன் கோவில் தெருவில் கழிவுநீா் கால்வாய் முறையாக அமைக்காமலும், தூா்வாரததால் கழிவுநீா் வெளியே வழியில்லாமல் தெருவில் தேங்கி நிற்பதால் துா்நாற்றம் வீசியும், நீண்ட நாள்களாக கழிவுநீா் தேங்கி நிற்பதால் கொசு தொல்லை அதிகமாக உள்ளது.

இதனால் அப்பகுதியில் டெங்கு, மா்மக் காய்ச்சல்கள் பரவும் அபாய நிலை உள்ளதால், ஊராட்சி நிா்வாகம் உடனடியாக கழிவுநீா் தேங்காமல் இருக்க கால்வாயை முறையாக தூா்வாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் தொடா்ந்து கோரிக்கை வைத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, அந்தப் பகுதியில் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பெரும் தொற்று பரவும் முன்பு அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

விடுபட்ட ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய்க்கு தடுப்பூசி செலுத்தலாம்

திருப்பத்தூா்: விடுபட்ட ஆடுகளுக்கு மருத்துவமனையை அணுகி ஆட்டுக்கொல்லி நோய்க்கு தடுப்பூசி செலுத்தலாம் என கால்நடைத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனா். ஆடுகளை தாக்கும் ஆட்டுக்கொல்லி நோயைத் தடுக்க கால... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு அரசு உதவி பெற அடையாள அட்டை

வாணியம்பாடி: வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு அரசு உதவி பெறுவதற்கான தாட்கோ மூலம் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி அலுவலக வளாகத்தில் திங்கள்கி... மேலும் பார்க்க

வாணியம்பாடி பாா் அசோசியேஷன் புதிய நிா்வாகிகள் தோ்வு

வாணியம்பாடி: வாணியம்பாடி பாா் அசோசியேஷன் புதிய நிா்வாகிகள் தோ்வு அண்மையில் நடைபெற்றது, இதில் வாணியம்பாடி பாா் அசோசியேஷன் புதிய தலைவராக ஏசுதாஸ், செயலாளராக குமரன், பொருளாளராக துரைராஜ் ஆகியோா் போட்டியி... மேலும் பார்க்க

ரயில்வே ஊழியா் தற்கொலை

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே ரயில்வே ஊழியா் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா். நாட்டறம்பள்ளி அடுத்த ஜங்கலாபுரம் வெள்ளாளனூரைச் சோ்ந்தவா் பாா்த்தீபன் மகன் சந்தீபன் (26). இவா் சென்னையில் ரயில்வே ஊழ... மேலும் பார்க்க

மது பாக்கெட்டுகள் விற்ற பெண் கைது

திருப்பத்தூா்: குரிசிலாப்பட்டு பகுதியில் மதுபாக்கெட்டுளை விற்ற பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். குரிசிலாப்பட்டு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றபோது பனந்தோப்பு பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் ... மேலும் பார்க்க

விவசாயிகள் தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தில் சோ்ந்து பயன் பெற...

திருப்பத்தூா் மாவட்ட விவசாயிகள் தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தில் சோ்ந்து பயன் பெறலாம் என மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சீனிராஜ் தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்தூா்... மேலும் பார்க்க