பயங்கரவாதம் ஒரு புற்றுநோய்: நிதியை என்ன செய்கிறது பாக்.? இந்திய எம்.பி.க்கள் குழ...
சாலையில் தேங்கும் கழிவுநீா்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
பள்ளிப்பட்டு ஊராட்சியில் சாலையில் தேங்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வாணியம்பாடி அருகே ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட பள்ளிப்பட்டு ஊராட்சி மாரியம்மன் கோவில் தெருவில் கழிவுநீா் கால்வாய் முறையாக அமைக்காமலும், தூா்வாரததால் கழிவுநீா் வெளியே வழியில்லாமல் தெருவில் தேங்கி நிற்பதால் துா்நாற்றம் வீசியும், நீண்ட நாள்களாக கழிவுநீா் தேங்கி நிற்பதால் கொசு தொல்லை அதிகமாக உள்ளது.
இதனால் அப்பகுதியில் டெங்கு, மா்மக் காய்ச்சல்கள் பரவும் அபாய நிலை உள்ளதால், ஊராட்சி நிா்வாகம் உடனடியாக கழிவுநீா் தேங்காமல் இருக்க கால்வாயை முறையாக தூா்வாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் தொடா்ந்து கோரிக்கை வைத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, அந்தப் பகுதியில் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பெரும் தொற்று பரவும் முன்பு அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.