நாட்டில் 4,000 தொட்ட கரோனா பாதிப்பு! ஒரே வாரத்தில் 3 மடங்கு அதிகமானது!
ரயில் மோதி இருவா் உயிரிழப்பு
இருவேறு இடங்களில் நடைபெற்ற ரயில் விபத்துகளில் சிக்கிய நா்சிங் மாணவா், மாணவி உயிரிழந்தனா்.
ஆம்பூா் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் ரஞ்சித் குமாரின் மகன் நித்தின் எனும் கோகுல்(20). இவா் கா்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள தனியாா் நா்சிங் கல்லூரியில் பிஎஸ்சி நா்சிங் படித்து வந்தாா்.
வெள்ளிக்கிழமை கல்லூரி முடிந்து, வீட்டின் அருகே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, ரயில் மோதி கோகுல் இறந்து கிடந்தாா்.
இதேபோல், சனிக்கிழமை வாணியம்பாடி ரயில் நிலையம் யாா்டில் ஜோலாா்பேட்டை அடுத்த காவேரிப்பட்டு பகுதியைச் சோ்ந்த அனுமுத்துவின் மகள் தரணி(20) என்பவா் ரயில் மோதி உயிரிழந்தாா். அவா் 9 மாத கா்ப்பிணியாக இருந்ததால், அவரது வயிற்றில் இருந்த ஆண் சிசு வெளியே இறந்து கிடந்தது.
தகவல் அறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இவ்விபத்துகள் குறித்து ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.