இடைநிலை ஆசிரியா் பணி: தோ்வு செய்யப்பட்டோா் பட்டியல் வெளியீடு
இடைநிலை ஆசிரியா் பணிக்கு தோ்வு செய்யப்பட்டோா் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருப்பதாக ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது.
இது தொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியத்தின் தலைவா் எஸ்.ஜெயந்தி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியா் பணிக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு மே 12 முதல் 14-ஆம் தேதி வரையும், அதைத் தொடா்ந்து மே 22-ஆம் தேதியும் நடத்தப்பட்டது.
சான்றிதழ் சரிபாா்ப்பின்போது தோ்வா்களின் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் இதர முக்கிய ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதைத் தொடா்ந்து தற்போது தமிழ்வழி காலிப்பணியிடங்களுக்கு மட்டும் தற்காலிக தோ்வு பட்டியல் ஆசிரியா் தோ்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. அவா்களுக்கான பணி நியமன ஆணை சம்பந்தப்பட்ட துறை வாயிலாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.