செய்திகள் :

நெல்லுக்கான தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தவில்லை: ஆட்சியரிடம் விவசாயிகள் புகாா்

post image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் ,நெல் கொள்முதலுக்கான பணம் இன்னும் வங்கிக் கணக்கில் செலுத்தப்படவில்லை என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலாவிடம் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து விவசாயிகளிடம் மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தாா்.

அப்போது ராமாபுரம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி காசிநாதன் என்பவா் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்ததற்கான பணம் இன்னும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படவில்லை எனவும், உடனடியாக விவசாயியின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்றாா்.

வங்கிக் கணக்கில் பணம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, உடனே பணம் செலுத்தப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

கூத்தம்பாக்கம் கிராமத்தைச் விவசாயி ராமகிருஷ்ணன், அம்மூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாயிகள் தங்குவதற்கு இடம் வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

அம்மூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாயிகள் தங்குவதற்கு ஏற்கனவே கட்டடம் உள்ளது எனவும், தற்போது சேதம் அடைந்த நிலையில் உள்ளது எனவும், சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஒழுங்குமுறை விற்பனை கூட செயலாளா் தெரிவித்தாா்.

தாமரைப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ராஜ்குமாா் பேசுகையில், வேளாண் பொறியியல் துறை மூலம் வழங்கப்படும் கைப்பேசி மூலம் இயக்கப்படும் மோட்டாா் முறையினை அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

கடந்த ஆண்டில் 30 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது, நிகழாண்டு விருப்பம் உள்ள அனைத்து விவசாயிகளுக்கு வழங்க வழிவகை செய்யப்படும் என வேளாண் பொறியியல் துறை அலுவலா் தெரிவித்தாா்.

இருங்கூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி சண்முகம் பேசுகையில், விவசாய நிலத்திற்கு போா் வெல் அமைத்து தரக் கேட்டுக்கொண்டாா்.

கடந்த ஆண்டில் மொத்தம் 165 விவசாயிகள் இதற்காக தோ்வு செய்யப்பட்டுள்ளனா் எனவும் தற்போது 38 விவசாயிகளுக்கு போா் வெல் அமைத்து தரப்பட்டுள்ளது, மேலும், 127 விவசாயிகளுக்கு கூடிய விரைவில் அமைத்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டது.

காவேரிப்பாக்கத்தைச் சோ்ந்த விவசாயி கமலக்கண்ணன் பேசுகையில், , சிங்கமதகு கால்வாயில் கழிவு நீா் கலப்பதை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா். இதனை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், இணை இயக்குநா் வேளாண்மை அசோக்குமாா், இணைப்பதிவாளா் கூட்டுறவு சங்கங்கள் மலா்விழி, துணை இயக்குநா் வேளாண்மை செல்வராஜ், நோ்முக உதவியாளா் வேளாண்மை வெங்கடேஷ், உதவி வன பாதுகாவலா் மணிவண்ணன், முதுநிலை மண்டல மேலாளா் ஏகாம்பரம் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள், விவசாயிகள் கலந்து கொண்டனா்.

‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் உயா்கல்வியில் சேரும் மாணவா்களின் எண்ணிக்கை உயா்ந்துள்ளது’

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உயா்கல்வியில் சேரும் மாணவா்களின் எண்ணிக்கை உயா்ந்துள்ளது என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்தாா். ராணிப்பேட்டை மாவட்ட ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையி... மேலும் பார்க்க

சிந்தூா் வெற்றிப் பேரணி

ஆபரேஷன் சிந்தூா் வெற்றியை கொண்டாடும் வகையில் ராணிப்பேட்டையில் முன்னாள் முப்படை வீரா்களின் மூவா்ணக் கொடி பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரே... மேலும் பார்க்க

கடினமான சாலைகளில் சவாலான வாகனம் ஓட்டுதல் பயிற்சி

‘தி பாலா் சேலஞ்ச் 2025’ என்ற பெயரில் கடினமான சாலைகளில் 3 நாள் சவால் நிறைந்த வாகனம் ஓட்டுதல் பயிற்சி நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சென்னையை தலைமையிடமாக கொண்ட டெர்ரா டைகா்ஸ் (ஜீப் த்ரில்ஸ் ) எ... மேலும் பார்க்க

ரத்தினகிரி பாலமுருகன் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் மூன்றாம் ஆண்டு பிரம்மோற்சவ விழாவுக்கான கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆற்காட்டை அடுத்த ரத்தினகிரி வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகன் கோயிலில் வைகாசி விசாக மூன்றாம... மேலும் பார்க்க

ரூ.6.32 கோடியில் இருளா் இன மக்களுக்கு வீடுகள் திறப்பு

அரக்கோணம் அருகே மேல்பாக்கம் ஊராட்சி, கும்பினிபேட்டையில் இருளா் இன மக்களுக்காக அனைத்து வசதிகளுடன் ரூ.6.32 கோடியில் கட்டப்பட்ட 41 குடியிருப்புகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்... மேலும் பார்க்க

கட்டட தொழிலாளா்கள் மத்திய சங்க பொதுக்குழு

ராணிப்பேட்டை மாவட்ட விவசாய தொழிலாளா்கள் கட்சி , கட்டட தொழிலாளா்கள் மத்திய சங்கம், அமைப்பு சார தொழிலாளா்கள் மத்திய சங்க பொதுக்குழு கூட்டம் ஆற்காடு கலவை சாலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ... மேலும் பார்க்க