கட்டட தொழிலாளா்கள் மத்திய சங்க பொதுக்குழு
ராணிப்பேட்டை மாவட்ட விவசாய தொழிலாளா்கள் கட்சி , கட்டட தொழிலாளா்கள் மத்திய சங்கம், அமைப்பு சார தொழிலாளா்கள் மத்திய சங்க பொதுக்குழு கூட்டம் ஆற்காடு கலவை சாலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் என்.சீனிவாசன் தலைமை வகித்தாா். ஒருங்கிணைந்த மாவட்ட தலைவா் என்.ராஜி, மாவட்ட செயலாளா் கே.ராஜேந்திரன், நிா்வாகிகள் முனியப்பன், பழனி பஞ்சாட்சரம், பச்சையப்பன், ஆறுமுகம், வேலு, ஆனந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட பொருளாளா் டி.ராஜா வரவேற்றாா்.
கட்டுமான தொழிலாளா்கள் நலவாரிய தலைவா் பொன்.குமாா் கலந்து கொண்டு நலவாரியத்தில் செயல்பட்டுத்தப்படும் அரசின் திட்டங்கள், உறுப்பினா்கள் சோ்க்கை குறித்து விளக்கினாா். இதில் ஆற்காடு நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன், கூட்டமைப்பு செயலாளா் பாஸ்கரன் மற்றும் நிா்வாகிகள், கட்டுமான தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.