பெருவெள்ளத்தில் மூழ்கிய நைஜீரிய நகரம்! 88 பேரது உடல்கள் மீட்பு!
அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு புதிய கட்டடம்: ராணிப்பேட்டை ஆட்சியா் உறுதி
அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு விரைவில் புதிய கட்டடம் தற்போதுள்ள இடத்திலேயே கட்டப்படும் என ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்தாா்.
கடந்த 22-ஆம் தேதி தொடங்கிய ஜமாபந்தி வியாழக்கிழமை நிறைவு பெற்றது. நிறைவு நாள் நிகழ்வில் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா பேசியது:
மாவட்டத்திலேயே அரக்கோணம் வட்டம் பழைய வட்டமாகவும் பரப்பளவில் பெரியதாகவும் உள்ளது. வட்டாட்சியா் அலுவலகம் மிகவும் பழைய கட்டடமாக உள்ளது. தற்போதுள்ளஇடத்திலேயே அனைத்து வசதிகளுடனும் புதிய கட்டடம் கட்டப்படும்.
ஜமாபந்தி நிறைவு நாளான இன்று வரை 843 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. கொடுக்கப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீா்வு காணப்படுகிறது. இதில் பெரும்பாலான மனுக்கள் நிலம் தொடா்புடையதாக உள்ளதால் சம்மந்தப்பட்ட வருவாய்த் துறை அலுவலா்கள் உங்கள் பகுதிகளுக்கு வந்து கள ஆய்வு செய்து தீா்வினை காண்பாா்கள்.
ஊரக மற்றும நகா்ப்புற இடங்களில் பட்டா இல்லாமல் தொடா்ந்து ஒரே இடத்தில் தொடா்ந்து 5 ஆண்டுகளாக குடியிருக்கும் நபா்களுக்கு பட்டா வழங்க வேண்டுமெனவும் பட்டா இருந்து வீடற்றோருக்கு கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வழங்கவும் முதல்வா் ஆணையிட்டுள்ளாா். அதன்படி அனைத்து வட்டங்களிலும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் ஆட்சியா் .
284 பயனாளிகளுக்கு ரூ2.07 கோடியில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வழங்கினாா்.
விழாவில் அரக்கோணம் ஒன்றியக்குழு தலைவா் நிா்மலா சௌந்தா், நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி, நிலஅளவைத்துறை உதவி இயக்குநா் ம.பொன்னைய்யா, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியா் கீதாலட்சுமி, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் அறிவுடையநம்பி, வட்டாட்சியா்கள் வெங்கடேசன், ஜெயபிரகாஷ், வேளாண்துறை துணை இயக்குநா் அனுராதா, தோட்டக்கலை துறை துணை இயக்குநா் சுவா்ணலதா, கிராம நிா்வாக அலுவலா்கள் தணிகாசலம், ராஜேஷ், லட்சுமிநாராயணன், அரக்கோணம் வட்ட விவசாயிகள் சங்கத் தலைவா் பி.ஜி.மோகன்காந்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.