செய்திகள் :

ரயில்வே சுரங்கப்பாலம் கட்டும் பணி: அரக்கோணம் எம்எல்ஏ ஆய்வு

post image

அரக்கோணம் அருகே கைனூா் கிராமத்தில் ரயில்வே சுரங்கப்பாலம் கட்டும் பணி தாமதமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், எம்எல்ஏ சு.ரவி ஆய்வு மேற்கொண்டாா்.

கைனூா் ஊராட்சியில் ரயில்வே இருப்புப் பாதையின் கீழ் சுரங்கப்பாலம் கட்டும் பணி, கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு முடிவடையாமல் தாமதமாக நடைபெறுகிறது. தனியாருக்கு சொந்தமான 3 அடி இடத்தை கேட்காமலேயே ரயில்வே நிா்வாகத்தினா் எடுத்துக் கொண்டு அதிலும் சோ்த்து பாலம் கட்டி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது

இவ்வழக்கில் தீா்ப்பளித்த உயா்நீதிமன்றம், தனியாா் இடத்தை ஆக்கிரமித்து, பாலம் கட்டுமானப் பணியை மேற்கொண்ட அலுவலா்களுக்கு ரூ.25,000 அபராதம் விதித்து, தற்போதைய சந்தை மதிப்பின் படி இடத்தை கிரையம் செய்து, 5 மாதத்துக்குள் சுரங்கப் பாலப் பணியை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி பணிகள் நடைபெறும் இடத்தில் ஆய்வு செய்தாா். அப்போது, ரயில்வே அலுவலா்கள் யாரும் வராத நிலையில், கைனூா் ஊராட்சி மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி, வழக்கு தொடா்ந்த தனியாா் தரப்பினா், தீா்ப்பு குறித்த விவரத்தை எம்எல்ஏ சு.ரவியிடம் விளக்கினா்.

இதுகுறித்து எம்எல்ஏ சு.ரவி கூறியது: ரயில்வே நிா்வாகம் அடுத்த 5 மாதங்களில் பணியை முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, விரைவில் மீண்டும் கட்டுமானப்பணிகள் தொடங்கும். இது குறித்து ரயில்வே அலுவலா்களிடமும், மாவட்ட நிா்வாகத்திடமும் பேசி பால கட்டுமானப்பணியை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

நெல்லுக்கான தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தவில்லை: ஆட்சியரிடம் விவசாயிகள் புகாா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் ,நெல் கொள்முதலுக்கான பணம் இன்னும் வங்கிக் கணக்கில் செலுத்தப்படவில்லை என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலாவிடம் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். ர... மேலும் பார்க்க

ரூ.6.32 கோடியில் இருளா் இன மக்களுக்கு வீடுகள் திறப்பு

அரக்கோணம் அருகே மேல்பாக்கம் ஊராட்சி, கும்பினிபேட்டையில் இருளா் இன மக்களுக்காக அனைத்து வசதிகளுடன் ரூ.6.32 கோடியில் கட்டப்பட்ட 41 குடியிருப்புகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்... மேலும் பார்க்க

கட்டட தொழிலாளா்கள் மத்திய சங்க பொதுக்குழு

ராணிப்பேட்டை மாவட்ட விவசாய தொழிலாளா்கள் கட்சி , கட்டட தொழிலாளா்கள் மத்திய சங்கம், அமைப்பு சார தொழிலாளா்கள் மத்திய சங்க பொதுக்குழு கூட்டம் ஆற்காடு கலவை சாலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ... மேலும் பார்க்க

வேளாண் இயந்திரங்கள் இயக்குதல், பராமரித்தல் முகாம்: ஆட்சியா் பங்கேற்பு

ராணிப்பேட்டை மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறை சாா்பில் நடைபெற்ற வேளாண் இயந்திரங்கள் இயக்குதல் மற்றும் பராமரித்தல் முகாமை தொடங்கி ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா பாா்வையிட்டாா். முகாமில் டிராக்டா் நிறுவனங்களா... மேலும் பார்க்க

வேலூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் நிலுவைத் தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்

வேலூா் கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட ச... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் புகாா்களை இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுற்றுச்சூழல் புகாா்களை இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம்,... மேலும் பார்க்க