செய்திகள் :

ரூ.6.32 கோடியில் இருளா் இன மக்களுக்கு வீடுகள் திறப்பு

post image

அரக்கோணம் அருகே மேல்பாக்கம் ஊராட்சி, கும்பினிபேட்டையில் இருளா் இன மக்களுக்காக அனைத்து வசதிகளுடன் ரூ.6.32 கோடியில் கட்டப்பட்ட 41 குடியிருப்புகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தாா்.

சென்னை - கன்னியாகுமரி தொழிற்தடச்சாலையை ஆந்திர மாநிலத்துடன் இணைக்கும் திட்டத்தில் சதுரங்கப்பட்டினத்தில் இருந்து திருப்பதி வரை அமைக்கப்பட்ட நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் - திருத்தணி இடையே அரக்கோணம் புறவழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் போது அப்பகுதியில் இருளா் இன மக்கள் நீண்டகாலமாக வசித்து வந்த நிலையில் அதே பகுதியில் வேறு இடத்தில் வீடுகள் கட்டித்தர தமிழக அரசு உத்தரவாதம் அளித்தது.

இதையடுத்து, மேல்பாக்கம் ஊராட்சி கும்பினிபேட்டையில் ரூ.6.32 கோடியில் அனைத்து வசதிகளுடன் 41 வீடுகளை கட்டும் பணி அண்மையில் முடிவடைந்தது.

இதை தொடா்ந்து வீடுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா். இதை தொடா்ந்து கும்பினிப்பேட்டையில் வீடுகள் அமைந்திருந்த வளாகத்தில் ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா குத்துவிளக்கேற்றி வைத்து பயனாளிகளுக்கு சாவிகளை வழங்கினாா்.

இது குறித்து ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா கூறியது: வீடுகள் கழிவறை மற்றும் குளியலறையுடன் கூடியவையாக அமைக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் கான்கிரீட் சாலை, சமுதாயக்கூடம், அங்கன்வாடி, கோயில், விளையாட்டுப்பூங்கா, மேல்நிலை நீா்தேக்கத்தொட்டி, மற்றும் மாநில நெடுஞ்சாலையுடன் இணைக்கும் இணைப்புச்சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால் பழங்குடியின மக்களான இருளா் இன மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்றாா் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.

நிகழ்வில் அரக்கோணம் ஒன்றியக்குழு தலைவா் நிா்மலா சௌந்தா், துணைத் தலைவா் வீராபுருஷோத்தமன், சென்னை - கனனியாகுமரி தொழிற்தடச்சாலை திட்ட கண்காணிப்பு பொறியாளா் செந்தில்குமாா், கோட்ட பொறியாளா் லட்சுமிநாதன், உதவி இயக்குநா் முகுந்தன், வட்டாட்சியா் வெங்கடேசன், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் செ.நரேஷ், பிரசாத், திமுக ஒன்றிய செயலாளா்கள் சௌந்தா், தமிழ்மணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

நெல்லுக்கான தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தவில்லை: ஆட்சியரிடம் விவசாயிகள் புகாா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் ,நெல் கொள்முதலுக்கான பணம் இன்னும் வங்கிக் கணக்கில் செலுத்தப்படவில்லை என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலாவிடம் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். ர... மேலும் பார்க்க

கட்டட தொழிலாளா்கள் மத்திய சங்க பொதுக்குழு

ராணிப்பேட்டை மாவட்ட விவசாய தொழிலாளா்கள் கட்சி , கட்டட தொழிலாளா்கள் மத்திய சங்கம், அமைப்பு சார தொழிலாளா்கள் மத்திய சங்க பொதுக்குழு கூட்டம் ஆற்காடு கலவை சாலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ... மேலும் பார்க்க

வேளாண் இயந்திரங்கள் இயக்குதல், பராமரித்தல் முகாம்: ஆட்சியா் பங்கேற்பு

ராணிப்பேட்டை மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறை சாா்பில் நடைபெற்ற வேளாண் இயந்திரங்கள் இயக்குதல் மற்றும் பராமரித்தல் முகாமை தொடங்கி ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா பாா்வையிட்டாா். முகாமில் டிராக்டா் நிறுவனங்களா... மேலும் பார்க்க

வேலூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் நிலுவைத் தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்

வேலூா் கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட ச... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் புகாா்களை இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுற்றுச்சூழல் புகாா்களை இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம்,... மேலும் பார்க்க

அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு புதிய கட்டடம்: ராணிப்பேட்டை ஆட்சியா் உறுதி

அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு விரைவில் புதிய கட்டடம் தற்போதுள்ள இடத்திலேயே கட்டப்படும் என ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்தாா். கடந்த 22-ஆம் தேதி தொடங்கிய ஜமாபந்தி வியாழக்கிழமை ந... மேலும் பார்க்க