தஞ்சை பட்டாசு கிடங்கு வெடிவிபத்தில் இருவா் உயிரிழப்பு: பசுமைத் தீா்ப்பாயம் நோட்ட...
வேலூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் நிலுவைத் தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்
வேலூா் கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அம்முண்டி வேலூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் 2024-25 அரைவை தொடங்கப்பட்டு 19.03.2025 விவசாயிகளிடமிருந்து 1,27,679.222 மெட்ரிக் டன் கரும்பு பெறப்பட்டு வரை அரைவை செய்யப்பட்டது. கரும்பு கிரய நிலுவைத் தொகை 1,952 விவசாயிகளுக்கும் பகுதியாக வழங்க வேண்டியுள்ளது. இதற்கான மொத்த கரும்பு கிரயத்தொகை ரூ.40.24 கோடி ஆகும்.
இதில் ஆலை மூலம் ரூ.35.99 கோடி அனைத்து அங்கத்தினா்களுக்கும் பகுதியாக வழங்கப்பட்டுவிட்டது. நிலுவைத் தொகை ரூ.4.25 கோடி ஆகும். ஆலையின் கோரிக்கையின் அடிப்படையில் சா்க்கரைத்துறை இயக்குநா் பரிந்துரையின்படி சுற்றுலாத் துறை மற்றும் சா்க்கரைத்துறை அமைச்சரின் சீரிய முயற்சியால் முதல்வரின் உத்தரவின்படி ரூ.4.25 கோடி ஆலைக்கு அனுப்பப்பட்டுவிட்டது. நிலுவைத்தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.