Suryavanshi: அவரது வருங்காலம் சிறப்பாக அமைய வேண்டும் - சூர்யவன்ஷியை நேரில் வாழ்த்திய பிரதமர் மோடி
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக வைபவ் சூர்யவன்ஷி என்கிற 14 வயது வீரர் ஆடினார். ஐ.பி.எல் வரலாற்றின் மிக இளம் வயது வீரர் எனும் பெருமையையும் வைபவ் பெற்றிருக்கிறார்.
லக்னோவுக்கு எதிரான அறிமுகப் போட்டியில் 34 ரன்களை எடுத்து அசத்தியிருந்தார். எதிர்கொண்ட முதல் பந்தையே சிக்சரும் ஆக்கியிருந்தார். அது அத்தனை பேரின் கவனத்தையும் ஈர்த்தது. அனைவரும் வைபவ்வை நெகிழ்ந்து பாராட்டினர்.

ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷியை ஏற்கெனவே நிகழ்வு ஒன்றில் மோடி பாராட்டியிருந்தார். இந்நிலையில், பாட்னா விமான நிலையத்தில் பிரதமர் மோடியை தன் குடும்பத்துடன் சூர்யவன்ஷி சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். "பாட்னா விமான நிலையத்தில் இளம் கிரிக்கெட்டர் வைபவ் சூர்யான்ஷியையும் அவரின் குடும்பத்தையும் சந்தித்தேன்.
At Patna airport, met the young cricketing sensation Vaibhav Suryavanshi and his family. His cricketing skills are being admired all over the nation! My best wishes to him for his future endeavours. pic.twitter.com/pvUrbzdyU6
— Narendra Modi (@narendramodi) May 30, 2025
அவரது கிரிக்கெட் திறமைகள் இந்தியா முழுவதும் பாராட்டப்படுகிறது. அவரது வருங்காலம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்” என்று பதிவிட்டிருக்கிறார்.