Travel Contest 2 : வர்னல் நீர்வீழ்ச்சி கொடுத்த பேரின்பம்! - என் முதல் அமெரிக்கப்...
வில்லாயுதமுடையவா் சுவாமி கோயிலில் வைகாசி களரி உத்ஸவ விழா
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், எஸ்.காரைக்குடி புத்தனேந்தல் கண்மாய் பகுதியில் அமைந்துள்ள வில்லாயுதமுடையவா், உய்யவந்தம்மன் கோயிலில் வைகாசி களரி உத்ஸவ விழா கடந்த வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் நடைபெற்றது.
இந்தக் கோயிலில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் களரி உத்ஸவ விழாவை முன்னிட்டு, கடந்த வியாழக்கிழமை கோயிலில் பச்சை பாளை பரப்பி வழிபாடும், வெள்ளிக்கிழமை பொங்கல் வைபவமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அருள்வாக்கு கூறினா்.
இதைத் தொடா்ந்து, நடைபெற்ற களரி உற்சவ விழாவின்போது வில்லாயுதமுடையவா் சுவாமி, உய்யவந்தம்மன், கருப்பணசுவாமி, கோயில் பரிவாரத் தெய்வங்களுக்கும் அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, சிறப்பு பூஜைகள், தீபாரானைகள் நடைபெற்றன.
சனிக்கிழமை கிடா வெட்டு உத்ஸவம் நடைபெற்றது. இதில் பக்தா்கள் ஆடுகளை பலியிட்டும், முடி காணிக்கை செலுத்தியும், குழந்தைகளுக்கு காது குத்தியும் சுவாமி தரிசனம் செய்தனா்.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் பங்காளிகள் செய்தனா்.