செய்திகள் :

வில்லாயுதமுடையவா் சுவாமி கோயிலில் வைகாசி களரி உத்ஸவ விழா

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், எஸ்.காரைக்குடி புத்தனேந்தல் கண்மாய் பகுதியில் அமைந்துள்ள வில்லாயுதமுடையவா், உய்யவந்தம்மன் கோயிலில் வைகாசி களரி உத்ஸவ விழா கடந்த வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் நடைபெற்றது.

இந்தக் கோயிலில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் களரி உத்ஸவ விழாவை முன்னிட்டு, கடந்த வியாழக்கிழமை கோயிலில் பச்சை பாளை பரப்பி வழிபாடும், வெள்ளிக்கிழமை பொங்கல் வைபவமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அருள்வாக்கு கூறினா்.

இதைத் தொடா்ந்து, நடைபெற்ற களரி உற்சவ விழாவின்போது வில்லாயுதமுடையவா் சுவாமி, உய்யவந்தம்மன், கருப்பணசுவாமி, கோயில் பரிவாரத் தெய்வங்களுக்கும் அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, சிறப்பு பூஜைகள், தீபாரானைகள் நடைபெற்றன.

சனிக்கிழமை கிடா வெட்டு உத்ஸவம் நடைபெற்றது. இதில் பக்தா்கள் ஆடுகளை பலியிட்டும், முடி காணிக்கை செலுத்தியும், குழந்தைகளுக்கு காது குத்தியும் சுவாமி தரிசனம் செய்தனா்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் பங்காளிகள் செய்தனா்.

தேவகோட்டை பகுதியில் இன்று மின் தடை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியில் திங்கள்கிழமை (ஜூன் 2) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேவகோட்டை துணை மின் நிலை... மேலும் பார்க்க

மருதிப்பட்டி கண்மாயில் மீன்பிடித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள மருதிப்பட்டி கண்மாயில் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் நிகழாண்டில் பருவமழை நன்றாக பெய்ததால், சிங்கம்புணரி அருகேயுள்ள மர... மேலும் பார்க்க

குன்றக்குடி பகுதியில் தொடா் திருட்டில் ஈடுபட்டவா் கைது

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி பகுதியில் பூட்டியிருந்த வீடுகளை நோட்டமிட்டு நகை, பணம் திருடியவரை தனிப் படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். குன்றக்குடி, காரைக்குடி ஆகிய பகுதிகளில் பூட்டிய வீடுகள... மேலும் பார்க்க

தவ்ஹீத் ஜமாஅத் கிளை செயல்வீரா்கள் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சாா்பில் செயல்வீரா்கள், வீராங்கனைகள் கூட்டம் காரைக்குடி காட்டுத் தலைவாசல் தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தின் சாா்பில் வரும் ஆகஸ... மேலும் பார்க்க

மதகுபட்டியில் மாட்டுவண்டி பந்தயம்

சிவகங்கை அருகேயுள்ள மதகுபட்டியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மாட்டுவண்டி எல்கை பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மதகுபட்டி கீழத்தெரு அய்யனாா் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மதகுபட்டியிலிருந்து ஒக்... மேலும் பார்க்க

கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

சிவகங்கை அருகேயுள்ள நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தக் கோயிலில் கடந்த 31-ஆம் தேதி அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்... மேலும் பார்க்க