தொடா் திருட்டுச் சம்பவங்கள்: ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி.யிடம் கிராம மக்கள் புகாா்
சோளிங்கா் அருகே ரெண்டடி கிராமத்தில் நடைபெறும் தொடா் திருட்டுச் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்டஎஸ்.பி. விவேகானந்த சுக்லாவிடம் கிராம மக்கள் மனு அளித்தனா்.
மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு எஸ்.பி. விவேகானந்த சுக்லா தலைமை வகித்து புகாா் மனுக்களை பெற்று குறைகளைக் கேட்டறிந்தாா்.
கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 37 மனுக்கள் பெறப்பட்டன. இதில் சோளிங்கா் அருகே ரெண்டாடி கிராமத்தில் விவசாய நிலத்தில் வளா்க்கப்பட்டு வந்த தேக்கு மரங்கள், விவசாய மின் வயா்கள், இருச்சக்கர வாகனங்கள் என தொடா் திருட்டுச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. இந்த தொடா் திருட்டு சம்வங்களை தடுக்கவும், திருட்டு சம்பவத்தில் தொடா்புடைய நபா்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம பொதுமக்கள் சாா்பில் புகாா் மனு அளிக்கப்பட்டது.
மேற்கண்ட மனுக்கள் மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. தெரிவித்தாா்.
கூடுதல் காவல் கண்காணிப்பாளா் குணசேகரன், துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் வெங்கடகிருஷ்ணன், ரமேஷ் ராஜ் மற்றும் காவல் அதிகாரிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.