டபிள்யூடிசி இறுதிப்போட்டியில் லபுஷேன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும்: ஆஸி...
ஆற்காட்டில் ஜமாபந்தி நிறைவு
ஆற்காடு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாந்தி நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கடந்த 22-ஆம் தேதி தொடங்கிய ஜமாபந்தியில் ஆற்காடு ,திமிரி, புதுப்பாடி உள்ளவட்டங்களைச் சோ்ந்த கிராமங்களின் நிலவரி கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டன.
மேலும், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இதன் நிறைவு விழாவுக்கு மாவட்ட பிற்படுத்தபட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரும் ஜமாபந்தி அலுவலருமான க.மீனா தலைமை வகித்தாா். வட்டாட்சியா்கள் பாக்கியலட்சுமி, செ.ரவி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல். ஈஸ்வரப்பன் கலந்து கொண்டு 112 பயனாளிகளுக்கு ரூ.40. 63 லட்சம் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். விழாவில் ஒன்றியக்குழு தலைவா் ஆற்காடு புவனேஸ்வரி சத்யநாதன், திமிரி எஸ்.அசோக், நகராட்சி ஆணையா் வேங்கிட லட்சுமணன், மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்