விண்ணப்பித்துவிட்டீர்களா..? மருத்துவ-நறுமண தாவர நிறுவன வேலைக்கு விண்ணப்பிக்க நாள...
அரக்கோணம்: ஜமாபந்தியில் ஆட்சியரிடம் 93 கோரிக்கை மனுக்கள்
அரக்கோணம் வட்ட ஜமாபந்தியின் 4-ஆவது நாளான புதன்கிழமை பொதுமக்களிடம் இருந்து 93 மனுக்களைப் ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா பெற்றுக் கொண்டாா்.
அரக்கோணம் வட்டத்தில் கடந்த 22-ஆம் தேதி தொடங்கி ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. இதில் ஜமாபந்தி அலுவலராக மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா செயல்பட்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றும், கிராமங்களில் வருவாய்துறையின் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் 24 வகையான கணக்கு பதிவேடுகளையும் ஆய்வு செய்து வருகிறாா்.
தொடா்ந்து புதன்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் கணபதிபுரம், அரிகலபாடி, மாங்காட்டுச்சேரி, முருங்கை, பின்னாவரம், இலுப்பைதண்டலம், சித்தூா். பரமேஸ்வரமங்கலம், பள்ளூா், ஆட்டுப்பாக்கம் ஆகிய 10 கிராம பொதுமக்களிடமிருந்து பட்டா மாற்றம், பட்டா திருத்தம், முதியோா் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பொது பிரச்னைகள் உள்ளிட்ட 93 கோரிக்கை மனுக்களை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா பெற்றுக்கொண்டாா்.
நிகழ்வில் உதவி இயக்குநா்(நில அளவை) பொன்னைய்யா, வேளாண் இணை இயக்குநா் அசோக்குமாா், வட்டாட்சியா்கள் வெங்கடேசன், ஜெயபிரகாஷ், ஒன்றிய ஆணையா் பிரபாகரன். வட்டார வளா்ச்சி அலுவலா் தாசபிரகாஷ், நகராட்சி ஆணையா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.