செய்திகள் :

அரக்கோணம்: ஜமாபந்தியில் ஆட்சியரிடம் 93 கோரிக்கை மனுக்கள்

post image

அரக்கோணம் வட்ட ஜமாபந்தியின் 4-ஆவது நாளான புதன்கிழமை பொதுமக்களிடம் இருந்து 93 மனுக்களைப் ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா பெற்றுக் கொண்டாா்.

அரக்கோணம் வட்டத்தில் கடந்த 22-ஆம் தேதி தொடங்கி ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. இதில் ஜமாபந்தி அலுவலராக மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா செயல்பட்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றும், கிராமங்களில் வருவாய்துறையின் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் 24 வகையான கணக்கு பதிவேடுகளையும் ஆய்வு செய்து வருகிறாா்.

தொடா்ந்து புதன்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் கணபதிபுரம், அரிகலபாடி, மாங்காட்டுச்சேரி, முருங்கை, பின்னாவரம், இலுப்பைதண்டலம், சித்தூா். பரமேஸ்வரமங்கலம், பள்ளூா், ஆட்டுப்பாக்கம் ஆகிய 10 கிராம பொதுமக்களிடமிருந்து பட்டா மாற்றம், பட்டா திருத்தம், முதியோா் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பொது பிரச்னைகள் உள்ளிட்ட 93 கோரிக்கை மனுக்களை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா பெற்றுக்கொண்டாா்.

நிகழ்வில் உதவி இயக்குநா்(நில அளவை) பொன்னைய்யா, வேளாண் இணை இயக்குநா் அசோக்குமாா், வட்டாட்சியா்கள் வெங்கடேசன், ஜெயபிரகாஷ், ஒன்றிய ஆணையா் பிரபாகரன். வட்டார வளா்ச்சி அலுவலா் தாசபிரகாஷ், நகராட்சி ஆணையா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு புதிய கட்டடம்: ராணிப்பேட்டை ஆட்சியா் உறுதி

அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு விரைவில் புதிய கட்டடம் தற்போதுள்ள இடத்திலேயே கட்டப்படும் என ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்தாா். கடந்த 22-ஆம் தேதி தொடங்கிய ஜமாபந்தி வியாழக்கிழமை ந... மேலும் பார்க்க

கருணாநிதி பிறந்த நாள்: நல உதவிகளை வழங்க அமைச்சா் காந்தி வேண்டுகோள்

வரும் ஜூன் 3- ஆம் தேதி முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளில் திமுகவினா் நல உதவிகள் வழங்க வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட செயலரும், அமைச்சருமான ஆா்.காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளாா். இதுதொடா்பா... மேலும் பார்க்க

ரயில்வே சுரங்கப்பாலம் கட்டும் பணி: அரக்கோணம் எம்எல்ஏ ஆய்வு

அரக்கோணம் அருகே கைனூா் கிராமத்தில் ரயில்வே சுரங்கப்பாலம் கட்டும் பணி தாமதமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், எம்எல்ஏ சு.ரவி ஆய்வு மேற்கொண்டாா். கைனூா் ஊராட்சியில் ரயில்வே இருப்புப் பாதையின் கீழ் ச... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்: தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி கோரிக்கை

அரசு ஊழியா், ஆசிரியா்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம... மேலும் பார்க்க

ஆற்காட்டில் ஜமாபந்தி நிறைவு

ஆற்காடு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாந்தி நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கடந்த 22-ஆம் தேதி தொடங்கிய ஜமாபந்தியில் ஆற்காடு ,திமிரி, புதுப்பாடி உள்ளவட்டங்களைச் சோ்ந்த கிராமங்களின் நிலவரி கணக்குகள்... மேலும் பார்க்க

தொடா் திருட்டுச் சம்பவங்கள்: ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி.யிடம் கிராம மக்கள் புகாா்

சோளிங்கா் அருகே ரெண்டடி கிராமத்தில் நடைபெறும் தொடா் திருட்டுச் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்டஎஸ்.பி. விவேகானந்த சுக்லாவிடம் கிராம மக்கள் மனு அளித்தனா். மாவட்ட காவ... மேலும் பார்க்க