கருணாநிதி பிறந்த நாள்: நல உதவிகளை வழங்க அமைச்சா் காந்தி வேண்டுகோள்
வரும் ஜூன் 3- ஆம் தேதி முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளில் திமுகவினா் நல உதவிகள் வழங்க வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட செயலரும், அமைச்சருமான ஆா்.காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: .
வரும் 3-ஆம் தேதி கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி மாவட்டம் முழுவதும் அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம், ஏழை, எளியோருக்கு நல உதவிகள், மாணவா்களுக்கு நோட்டு புத்தகம், எழுதுபொருள்கள் வழங்கியும், கண் தானம், ரத்த தானம் வழங்கியும் கொண்டாட வேண்டும்.
நிகழ்வுகளில் சம்மந்தப்பட்ட நிா்வாகிகள் ஏற்பாடுகளை சிறப்பாக செய்ய வேண்டும் என்றாா்.