செய்திகள் :

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தயாராக ஐபிஎல்லைவிட சிறந்த இடம் கிடையாது: ஜோஸ் ஹேசில்வுட்

post image

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தயாராக ஐபிஎல் தொடரைவிட சிறந்த இடம் கிடையாது என ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் ஜோஸ் ஹேசில்வுட், தோள்பட்டை காயம் காரணமாக கடந்த ஒரு மாதமாக ஆர்சிபி அணிக்காக போட்டிகளில் விளையாடவில்லை.

இதையும் படிக்க: இறுதிப்போட்டியில் மீண்டும் ஆர்சிபியுடன் மோதுவோம்: பஞ்சாப் கிங்ஸ் பயிற்சியாளர்

காயத்திலிருந்து மீண்டு அண்மையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் இணைந்த ஜோஸ் ஹேசில்வுட், சண்டீகரில் நேற்று (மே 29) நடைபெற்ற குவாலிஃபையர் 1 போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தி, பெங்களூரு அணியின் வெற்றிக்கு உதவினார்.

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக நேற்று நடைபெற்ற குவாலிஃபையர் 1 போட்டியில் 3.1 ஓவர்கள் வீசிய ஹேசில்வுட், 21 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பஞ்சாப் கிங்ஸ் அணியில் சிறப்பான ஃபார்மில் இருந்த கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஜோஷ் இங்லிஷின் விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார்.

ஐபிஎல்லைவிட சிறந்த இடம் கிடையாது

அடுத்த மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ள நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தயாராக ஐபிஎல்லைவிட சிறந்த இடம் கிடையாது என ஜோஸ் ஹேசில்வுட் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நான் தொடர்ச்சியாக பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். உலகின் எந்த மூலையில் இருந்தாலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்காக பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தயாராவதற்கு ஐபிஎல் தொடரைவிட சிறந்த இடம் வேறு இல்லை என நினைக்கிறேன். இங்கு அதிக நேரம் பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபடுகிறேன். போட்டியில் இருக்கும் தீவிரத்தன்மை என்னை நன்றாக தயார்படுத்திக் கொள்ள உதவுகிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்துவீசுவதைக் காட்டிலும் வேறுபட்ட விதமாக குவாலிஃபையர் 1 போட்டியில் பந்துவீசியதாக நினைக்கவில்லை. அதனால், எனது பந்துவீச்சு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. காயத்திலிருந்து மீண்டு அணிக்காக மீண்டும் சிறப்பாக செயல்படுவது சிறப்பான உணர்வைக் கொடுக்கிறது என்றார்.

இதையும் படிக்க: ஐபிஎல் எலிமினேட்டரில் குஜராத் டைட்டன்ஸ்: மும்பையை வீழ்த்துமா? மும்பையிடம் வீழுமா?

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வருகிற ஜூன் 11 ஆம் தேதி லார்ட்ஸ் திடலில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

ரோஹித் சர்மாவுடன் இணைந்து களமிறங்கியதில் மகிழ்ச்சி: ஜானி பேர்ஸ்டோ

ரோஹித் சர்மாவுடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கியது மிகுந்த மகிழ்ச்சியளித்தாக இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடரில் சண்டீகரில் நேற்று (மே 30) நடைபெற்ற எலிமினேட்டர் போட... மேலும் பார்க்க

ஹார்திக் பாண்டியாவுடன் மோதலா? என்ன சொல்கிறார் ஷுப்மன் கில்?!

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹார்திக் பாண்டியா மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன. இதற்கு ஷுப்மல் கில்... மேலும் பார்க்க

சக்கர நாற்காலியில் அமர்ந்து கிரிக்கெட் விளையாடிய ஏபிடி! வைரல் விடியோ!

ஆர்சிபி அணியின் முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் சக்கர நாற்காலியில் அமர்ந்து மாற்றுத் திறன் கொண்ட கிரிக்கெட் விளையாடி விடியோக்கள் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.நடப்பு ஐபில் தொடர் இந்தியாவின்... மேலும் பார்க்க

ரூ.10 லட்சம் யாருக்கு? சிஎஸ்கே வீரர் நூர் அகமதை முந்திய பிரசித் கிருஷ்ணா!

குஜராத் டைட்டன்ஸ் வீரர் பிரசித் கிருஷ்ணா அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் நூர் அகமதை முந்தியுள்ளார். ஐபிஎல் 18-ஆவது சீசனில் பிளே ஆஃப்ஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. குவாலிஃப்யர் 1-இல் ஆ... மேலும் பார்க்க

அதிர்ஷ்டம் ஆர்சிபி பக்கம் இருக்குமா? ஏபிடி வில்லியர்ஸ் கூறுவதென்ன?!

நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பை வெல்லுமா? இல்லையா? என்பது குறித்து முன்னாள் ஆர்சிபி வீரர் ஏபிடி வில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை மட்... மேலும் பார்க்க

அதிர்ஷ்டம் குறித்து ரோஹித் சர்மா பேசியதென்ன?

ஆட்ட நாயகன் விருது வென்ற ரோஹித் சர்மா தனக்குக் கிடைத்த அதிர்ஷடத்தை முழுவதுமாகப் பயன்படுத்திக் கொண்டதாகப் பேட்டியில் கூறியுள்ளார். ’எலிமினேட்டா்’ ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்த... மேலும் பார்க்க