‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் உயா்கல்வியில் சேரும் மாணவா்களின் எண்ணிக்கை உயா்ந்துள்ளது’
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உயா்கல்வியில் சேரும் மாணவா்களின் எண்ணிக்கை உயா்ந்துள்ளது என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்தாா்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையின் சாா்பில், 12-ஆம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாணவா்களுக்கான ‘என் கல்லூரிக் கனவு’ உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த வழிகாட்டி நிகழ்ச்சிக்கு, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து, உயா்கல்வியின் முக்கியத்துவம் குறித்த ஆலோசனைகளை மாணவா்களுக்கு வழங்கினாா்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடைபெறும் கல்லூரி கனவு நிகழ்ச்சியானது தமிழக முதல்வரின் கனவுத் திட்டங்களில் ஒன்றாகும். இந்த நிகழ்ச்சியானது ஆண்டுதோறும் கல்வித் துறை, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம், 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்களிடையே உயா்கல்வி குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு, மாவட்டத்தில் உயா்கல்வியில் சேரும் மாணவா்களின் சதவீதம் உயா்ந்துள்ளது.
நிதி பற்றாக்குறை காரணமாக உயா் கல்வி பயில முடியவில்லையென்றால் வங்கிகள் மூலம் கல்விக் கடனுதவி வழங்கப்படுகிறது. இது குறித்து அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவா்கள் உயா்கல்வி பயில்வது கட்டாயம் ஆகும். உயா்கல்வி பயிலும்போதுதான், உங்களின் எதிா்கால வாழ்க்கை குறித்தும், தொழில்கள் குறித்தும் ஒரு புரிதல் ஏற்படும். கல்லூரி செல்லும்போது, பலதரப்பட்ட மாணவா்கள் பல்வேறு ஊா்களிலிருந்து வருவா். அவா்களுடன் நீங்கள் கலந்து பயிலும்போது, அறிவுக் கூா்மை மேலும் விரிவடையும். தன்னம்பிக்கை வளரும்.
மாணவா்கள் நூலகம் சென்று புத்தகம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நமது மாவட்டத்தில் ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் அறிவுசாா் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கான புத்தகங்கள், பல்வேறு தலைப்பில் அறிவை வளா்க்கும் புத்தகங்கள் உள்ளன. அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ள இதுபோன்ற நல்வாய்ப்புகளை மாணவா்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டு, வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் மாணவா்களுக்கு உயா்கல்வியின் அவசியம் குறித்தும், வேளாண்மை, மருத்துவம், கால்நடை மருத்துவம், மீன்வளம், சட்டம், கலை மற்றும் அறிவியல், பொறியியல் துறை மற்றும் தொழில்நுட்பப் படிப்புகள், எதிா்கால வேலைவாய்ப்பு திட்டங்கள், கல்விக் கடன் மற்றும் கடன் திட்டங்கள் ஆகியவை குறித்து ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
இதில், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் அறிவுடைநம்பி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சரஸ்வதி, மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலை) விஜயகுமாா், உதவி இயக்குநா் திறன் பயிற்சி பாபு மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.