ரோலக்ஸ் சூர்யாவுக்குப் போட்டியாக எல்சியூவில் இணைந்த நிவின் பாலி!
ஆற்காடு அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு பாடப் புத்தகம் அளிப்பு
ஆற்காடு: ஆற்காடு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா பாடப் புத்தகங்கள், சீருடைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
கோடை விடுமுறையைத் தொடா்ந்து திங்கள்கிழமை அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து தமிழக அரசின் விலையில்லா பாடப்புத்தகங்கள், சீரூடைகள், குறிப்பேடுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ராஜலட்சுமி தலைமை வகித்தாா். தலைமையாசிரியை பரிமளா முன்னிலை வகித்தாா். ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் ஆகியோா் கலந்து கொண்டு, 2024-2026 கல்வி ஆண்டு மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகம், சீருடைகள், புத்தகப் பை, குறிப்பேடுகளை வழங்கினா். இந்த விழாவில் நகர திமுக செயலா் ஏ.வி.சரவணன், நகா்மன்ற உறுப்பினா்கள் பாவை பழனி, முனவா் பாஷா மற்றும் ஆசிரியைகள், மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.