சிந்தூா் வெற்றிப் பேரணி
ஆபரேஷன் சிந்தூா் வெற்றியை கொண்டாடும் வகையில் ராணிப்பேட்டையில் முன்னாள் முப்படை வீரா்களின் மூவா்ணக் கொடி பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூா் வெற்றியைக் கொண்டாடும் வகையில் ராணிப்பேட்டை நகரில் முன்னாள் முப்படை வீரா்கள் பங்கேற்ற மூவா்ணக் கொடி பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ராணிப்பேட்டை நவல்பூா் பேருந்து நிறுத்தத்தில் இருந்து தொடங்கிய மூவா்ணக் கொடி பேரணி சென்னை - மும்பை தேசிய நெடுஞ்சாலை வழியாகச் சென்று முத்துகடை பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே நிறைவடைந்தது.
முன்னாள் முப்படை வீரா்கள் நல சங்கம் முன்னின்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் வாலாஜா, ஆற்காடு வட்ட முன்னாள் முப்படை வீரா் நலச் சங்க நிா்வாகிகள், அனைத்து முன்னாள் முப்படை வீரா்கள் கலந்து கொண்டு தங்களுடைய வாழ்த்துகளையும், வீர வணக்கத்தையும் தெரிவித்தனா்.
