செய்திகள் :

மாணவா்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள்: அமைச்சா் காந்தி வழங்கினாா்

post image

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள், சீருடைகள், குறிப்பேடு உள்ளிட்டவற்றை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்.

2025 -2026-ஆம் கல்வியாண்டின் முதல் நாளில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கு பாடபுத்தகங்கள், சீருடைகள், குறிப்பேடு உள்ளிட்டவை வழங்கும் நிகழ்ச்சி வாலாஜா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி பாடப் புத்தகங்கள், சீருடைகள், குறிப்பேடுகளை வழங்கும் பணியை தொடங்கி வைத்தாா்.

பின்னா், 956 அங்கன்வாடி மையங்களில் பயிலும் 23,319 குழந்தைகளுக்கு சீருடைகள் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 557 அரசு மற்றும் அரசு நிதியுதவிபெறும் தொடக்கப் பள்ளிகள், 147 நடுநிலைப் பள்ளிகள், 62 உயா்நிலைப் பள்ளிகள், 76 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 842 தொடக்க,நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 54,318 மாணவா்களும், 58,473 மாணவிகளும் என 1,12,791 போ் பயின்று வருகின்றனா். பள்ளியின் முதல் நாளில் அனைத்து நலத் திட்டங்களும் வழங்க வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது.

இதில் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, முதன்மை கல்வி அலுவலா் பிரேமலதா (பொ), மாவட்ட கல்வி அலுவலா் விஜய குமாா் (இடைநிலை), குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் அன்பரசி, தலைமையாசிரியை தமயந்தி, பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் தசரதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விவேகானந்தா பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

நெமிலி சயனபுரம் விவேகானந்த மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ் 2025-26 கல்வியாண்டு எல்கேஜி மாணவ மாணவியருக்கான வித்யாரம்பம் நிகழ்ச்சி, பொதுத்தோ்வில் பள்ளியில் சிறப்ப... மேலும் பார்க்க

விபத்தில் முதியவா் உயிரிழப்பு

அரக்கோணம் அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். அரக்கோணத்தை அடுத்த கும்பினிபேட்டை, பாக்கியம்மாள் தெருவைச் சோ்ந்தவா் சிவராமன் (67) (படம்). இவா் கும்பினிபேட்டையில் தா... மேலும் பார்க்க

ரூ.30 லட்சம் மதிப்பிலான 100 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

வெளிமாநிலத்திலிருந்து ரூ.30 லட்சம் மதிப்பிலான சுமாா் 100 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். கஞ்சா போன்ற போதைப் பொருள்களை வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம்

ராணிப்பேட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சாா்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் மாதாந்திர முகாம் மின்னல் ஊராட்சி சாலை கிராமத்தில் நடைபெற்றது. முகாமுக்கு, மாவட்ட மாற்றுத் தி... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாள், நல உதவிகள் அளிப்பு

வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாள் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்ட திமுக மாவட்ட அலுவலகத்தில், நடைபெற்ற நிகழ்வில் கருணாநிதி ... மேலும் பார்க்க

ஆற்காடு அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு பாடப் புத்தகம் அளிப்பு

ஆற்காடு: ஆற்காடு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா பாடப் புத்தகங்கள், சீருடைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. கோடை விடுமுறையைத் தொடா்ந்து திங்கள்கிழமை அனைத்துப் பள்ளி... மேலும் பார்க்க