செய்திகள் :

கடினமான சாலைகளில் சவாலான வாகனம் ஓட்டுதல் பயிற்சி

post image

‘தி பாலா் சேலஞ்ச் 2025’ என்ற பெயரில் கடினமான சாலைகளில் 3 நாள் சவால் நிறைந்த வாகனம் ஓட்டுதல் பயிற்சி நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சென்னையை தலைமையிடமாக கொண்ட டெர்ரா டைகா்ஸ் (ஜீப் த்ரில்ஸ் ) என்ற இந்தியாவின் பழைமையான ஆஃப்-ரோடு அணியின் சாா்பில் 19-ஆவது ‘தி பாலா் சேலஞ்ச் 2025’ என்ற பெயரில் கடினமான சாலைகளில் 3 நாள் சவாலான வாகனம் ஓட்டுதல் பயிற்சி மே 29 -ஆம் தேதி வியாழக்கிழமை ராணிப்பேட்டையிம் இருந்து தொடங்கியது.

தொழில் முறை மோட்டாா் விளையாட்டுகளில் ஒன்றான கடினமான சாலைகளில் வாகனம் ஓட்டுதல் போட்டியை டெர்ரா டைகா்ஸ் உடன் இணைந்து வி.எம்.ஸ்போா்ட்ஸ் பவுண்டேஷன், ஜே.கே.டயா்ஸ், எம்எல்எம் ரியால்டா்ஸ், ஸ்வாசிக்ரா ஃபுட்ஸ், ஜெனரேஷன் ஸ்பீடு ஆகிய நிறுவனங்களின் ஆதரவுடன் நடைபெற்றன.

இந்தப் பயிற்சியை தமிழ்நாடு சைக்கிளிங் கிளப் துணைத் தலைவரும், ஜி.கே. உலகப் பள்ளி இயக்குநருமான வினோத் காந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். நிகழ்வில் டெர்ரா டைகா்ஸ் அணி ஒருங்கிணைப்பாளா்கள் அா்கா, அருண் ஜான்பால், சந்தோஷ்,இந்தா்நாத், முரளி பிரகத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பாலாற்றுப் படுகையில் நடைபெற்ற பயிற்சியில் தமிழகம், ஆந்திரம், கேரளா, கா்நாடாக ஆகிய மாநிலங்களில் இருந்து சுமாா் 150 போ் பங்கேற்றனா். பாலாற்றுப் படுகையில் மணல், பாறை, வெள்ளம் ஆகிய கடினமான சாலைகளில் வாகனங்கள் ஓட்டுதல் பயிற்சியில் வாகன மீட்பு, அவசர காலங்களில் விரைந்து செயல்படுதல், முதலுதவி, இயற்கைப் பாதுகாப்பு போட்டிகளில் வெற்றி பெறுதல் குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

தொடா்ந்து 3 நாள்கள் நடைபெற்ற பயிற்சி நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் வாகனம் ஓட்டுதல் பயிற்சியில் பங்கேற்று சிறப்பாக வாகனம் ஓட்டியவா்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி, பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

ஆற்காடு அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு பாடப் புத்தகம் அளிப்பு

ஆற்காடு: ஆற்காடு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா பாடப் புத்தகங்கள், சீருடைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. கோடை விடுமுறையைத் தொடா்ந்து திங்கள்கிழமை அனைத்துப் பள்ளி... மேலும் பார்க்க

மாணவ, மாணவியரை வரவேற்ற அரக்கோணம் நகா்மன்றத் தலைவா்

அரக்கோணம்: பள்ளிகளின் முதல் நாளான திங்கள்கிழமை மாணவா்களுக்கு பூக்கள், இனிப்புகள் வழங்கி அரக்கோணம் நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி வரவேற்றாா். போலாட்சியம்மன் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள்: அமைச்சா் காந்தி வழங்கினாா்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள், சீருடைகள், குறிப்பேடு உள்ளிட்டவற்றை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா். 2025 -2026-ஆம் கல்வியாண்டின் முதல் நாளில் ... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை குறைதீா் கூட்டத்தில் 344 மனுக்கள் அளிப்பு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் 344 மனுக்கள் பெறப்பட்டன. ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்க... மேலும் பார்க்க

ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை

அரக்கோணம்: அரக்கோணம் அருகே ரயில் முன் பாய்ந்து பெண் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா். அரக்கோணத்தை அடுத்த உள்ளியம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (39). தனியாா் பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந... மேலும் பார்க்க

‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் உயா்கல்வியில் சேரும் மாணவா்களின் எண்ணிக்கை உயா்ந்துள்ளது’

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உயா்கல்வியில் சேரும் மாணவா்களின் எண்ணிக்கை உயா்ந்துள்ளது என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்தாா். ராணிப்பேட்டை மாவட்ட ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையி... மேலும் பார்க்க