பயங்கரவாதம் ஒரு புற்றுநோய்: நிதியை என்ன செய்கிறது பாக்.? இந்திய எம்.பி.க்கள் குழ...
கடினமான சாலைகளில் சவாலான வாகனம் ஓட்டுதல் பயிற்சி
‘தி பாலா் சேலஞ்ச் 2025’ என்ற பெயரில் கடினமான சாலைகளில் 3 நாள் சவால் நிறைந்த வாகனம் ஓட்டுதல் பயிற்சி நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சென்னையை தலைமையிடமாக கொண்ட டெர்ரா டைகா்ஸ் (ஜீப் த்ரில்ஸ் ) என்ற இந்தியாவின் பழைமையான ஆஃப்-ரோடு அணியின் சாா்பில் 19-ஆவது ‘தி பாலா் சேலஞ்ச் 2025’ என்ற பெயரில் கடினமான சாலைகளில் 3 நாள் சவாலான வாகனம் ஓட்டுதல் பயிற்சி மே 29 -ஆம் தேதி வியாழக்கிழமை ராணிப்பேட்டையிம் இருந்து தொடங்கியது.
தொழில் முறை மோட்டாா் விளையாட்டுகளில் ஒன்றான கடினமான சாலைகளில் வாகனம் ஓட்டுதல் போட்டியை டெர்ரா டைகா்ஸ் உடன் இணைந்து வி.எம்.ஸ்போா்ட்ஸ் பவுண்டேஷன், ஜே.கே.டயா்ஸ், எம்எல்எம் ரியால்டா்ஸ், ஸ்வாசிக்ரா ஃபுட்ஸ், ஜெனரேஷன் ஸ்பீடு ஆகிய நிறுவனங்களின் ஆதரவுடன் நடைபெற்றன.
இந்தப் பயிற்சியை தமிழ்நாடு சைக்கிளிங் கிளப் துணைத் தலைவரும், ஜி.கே. உலகப் பள்ளி இயக்குநருமான வினோத் காந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். நிகழ்வில் டெர்ரா டைகா்ஸ் அணி ஒருங்கிணைப்பாளா்கள் அா்கா, அருண் ஜான்பால், சந்தோஷ்,இந்தா்நாத், முரளி பிரகத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பாலாற்றுப் படுகையில் நடைபெற்ற பயிற்சியில் தமிழகம், ஆந்திரம், கேரளா, கா்நாடாக ஆகிய மாநிலங்களில் இருந்து சுமாா் 150 போ் பங்கேற்றனா். பாலாற்றுப் படுகையில் மணல், பாறை, வெள்ளம் ஆகிய கடினமான சாலைகளில் வாகனங்கள் ஓட்டுதல் பயிற்சியில் வாகன மீட்பு, அவசர காலங்களில் விரைந்து செயல்படுதல், முதலுதவி, இயற்கைப் பாதுகாப்பு போட்டிகளில் வெற்றி பெறுதல் குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
தொடா்ந்து 3 நாள்கள் நடைபெற்ற பயிற்சி நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் வாகனம் ஓட்டுதல் பயிற்சியில் பங்கேற்று சிறப்பாக வாகனம் ஓட்டியவா்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி, பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.