செய்திகள் :

பாமக நிர்வாகிகளுக்கு 3 வாரங்கள் கெடு: அன்புமணி

post image

சென்னை: பாமக அடுத்தகட்டத்துக்குச் செல்ல நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருக்கிறார்.

இன்னும் 10 மாதங்களில் தேர்தல் வருகிறது. உறுப்பினர் அடையாள அட்டைகளை புதுப்பிக்கும் பணிகளை 3 வாரங்களில் முடிக்க வேண்டும். பாமகவில் உண்மையான உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு அன்புமணி ஆலோசனை வழங்கியுள்ளார்.

சென்னையில் 6 மாவட்ட செயலர்களுடன் ஆலோசனைக்குப் பின் சோழிங்கநல்லூரில் பாமக மாவட்டச் செயலர்கள் மத்தியில் பேசி வரும் அன்புமணி, உங்களால்தான் மாநாடு வெற்றி பெற்றது, என்னால் அல்ல என்றார்.

மேலும், நானே தலைவர், அன்புமணி செயல்தலைவர் என்று ராமதாஸ் கூறியிருந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாகவும் பேசி வருகிறார் அன்புமணி.

உங்களுக்குக் கொடுத்த பணிகளை 3 வாரங்களுக்குள் செய்து முடிக்க வேண்டும். முடியுமா? பாமக அடுத்தகட்டத்துக்குச் செல்ல நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். நமது சந்திப்பின் நோக்கம் 3 வாரங்களில் உங்களைது பணிகளை செய்து முடிக்க வேண்டும் என்றும் மிகப்பெரும் கலக்கத்தில் உள்ள பாமகவினரை உற்சாகப்படுத்தும் வகையிலும், நகைச்சுவையாகப் பேசி சிரிக்க வைத்தும் உரையாற்றினார் அன்புமணி.

மதுரை திமுக பொதுக்குழு கூட்டத்தில் முகக்கவசம் அணிந்துவர அறிவுரை

மதுரையில் நாளை (ஜீன் 1) நடைபெறும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் முகக்கவசம் அணிந்துவர அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. திமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் 50 வயது கடந்த நிர்வாகிகள் தங்களது பாதுகாப்புக்காக முகக்கவ... மேலும் பார்க்க

பொறியியல் கலந்தாய்வு- 2.74 லட்சம் பேர் விண்ணப்பம்

கடந்த 25 நாள்களில் பொறியியல் கலந்தாய்வுக்கு 2.74 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.சனிக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி 2,12,593 பேர் கட்டணம் செலுத்தியும், 1,77,646 பேர் சான்றிதழ் பதிவேற்றமும் செய்துள்ள... மேலும் பார்க்க

பாஜகவில் இணைந்தார் தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையத்தின் முன்னாள் தலைமை ஆணையர்

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜகோபாலன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் சனிக்கிழமை அக்கட்சியில் இணைந்தார். இதுகுற... மேலும் பார்க்க

வேலூர்: பச்சிளம் குழந்தை விரல் துண்டிப்பு! அலட்சியம் காட்டிய செவிலியர் மீது வழக்கு

வேலூரில் செவிலியரின் அலட்சியத்தால் பச்சிளம் குழந்தையின் விரல் துண்டிக்கப்பட்ட விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 6 நாள் பச்சிளம் குழ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் முடிவினை கைவிட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளுக்கான கட்டணத்தை உயர்த்தும் முடிவினை கைவிட வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், அரசுப் போக... மேலும் பார்க்க

மதுரையில் முதல்வரின் சாலைப் பேரணி தொடங்கியது!

மதுரை சென்றுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருங்குடி பகுதியில் மாபெரும் சாலைப் பேரணியில் ஈடுபட்டுள்ளார்.திமுக பொதுக் குழு கூட்டம் நாளை( ஜூன் 1) மதுரை உத்தங்குடியில் உள்ள கலைஞர் திடலில் நடைபெறவுள்ளது. ஆய... மேலும் பார்க்க