செய்திகள் :

மதுரையில் முதல்வரின் சாலைப் பேரணி தொடங்கியது!

post image

மதுரை சென்றுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருங்குடி பகுதியில் மாபெரும் சாலைப் பேரணியில் ஈடுபட்டுள்ளார்.

திமுக பொதுக் குழு கூட்டம் நாளை( ஜூன் 1) மதுரை உத்தங்குடியில் உள்ள கலைஞர் திடலில் நடைபெறவுள்ளது. ஆயிரக்கணக்கான கட்சி நிர்வாகிகள் இதில் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதில் கலந்துகொள்வதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலமாக இன்று பிற்பகல் மதுரை வந்தடைந்தார். அவருக்கு மதுரை மாவட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து இன்று மாலை மதுரை பெருங்குடி பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலையில் தொடங்கி முதல்வர், சாலைப் பேரணி மேற்கொண்டுள்ளார். ஆரப்பாளையம் வரை சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை பேரணி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஜெயஹிந்த்புரத்தில் நிழற்குடையைத் திறந்துவைக்கும் முதல்வர் அங்கு மக்களைச் சந்திக்கிறார். வழிநெடுக திமுகவினர் அவருக்கு வரவேற்பு அளித்து வருகின்றனர். அவனியாபுரம், வில்லாபுரம், பைபாஸ் ரோடு வழியாகச் செல்லும் அவர் மக்களைச் சந்தித்து மனுக்களைப் பெறுகிறார்.

அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல்வர் மாபெரும் சாலை பேரணி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | இந்தியா - பாகிஸ்தான் உடன்பாட்டுக்கு அமெரிக்கா காரணம்! 10-வது முறையாக டிரம்ப் பேச்சு!

‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையை உலக நாடுகள் ஏற்றுக் கொண்டன: ஆளுநா் ஆா்.என்.ரவி

‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையை உலக நாடுகளே ஏற்றுக் கொண்டநிலையில் நமது நாட்டில் சில எதிா்க்கட்சிகள் அதுகுறித்து கேள்விகள்- சந்தேகங்களை எழுப்பி வருகின்றன என ஆளுநா் ஆா். என். ரவி கூறினாா். சென்னை தியாகர... மேலும் பார்க்க

பொது இடங்களில் புகைப்பிடிப்பு: ரூ.7.97 கோடி அபராதம் வசூல்

பொது இடங்களில் புகைப் பிடித்தல், சிறாா்களுக்கு புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தல் போன்ற விதிமீறல்களில் ஈடுபட்ட 4.60 லட்சம் பேரிடமிருந்து ரூ.7.97 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் து... மேலும் பார்க்க

ஆட்டோ மீட்டா் கட்டணம் குறித்து தலைமைச் செயலா் ஆலோசனை அமைச்சா் தகவல்

ஆட்டோ மீட்டா் கட்டணம் குறித்து தலைமைச் செயலா் ஆலோசித்து வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்துள்ளாா். ஆட்டோக்களுக்கான மீட்டா் கட்டணத்தை தமிழக அரசு 2013-இல் மாற்றி அமைத்தது. அ... மேலும் பார்க்க

மத்திய அரசுக்கு எதிராக வீண் பழி சுமத்துவதா? திமுக பொதுக்குழு தீா்மானங்கள் குறித்து பாஜக விமா்சனம்

மத்திய அரசு மீது வீண்பழி சுமத்தி மக்களை திசைதிருப்புவதையே முதல்வா் மு.க.ஸ்டாலின் முழுநேரப் பணியாக மேற்கொண்டு வருவதாக தமிழ்நாடு பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் விமா்சித்துள்ளாா். மத்திய அரசுக்கு எதிரா... மேலும் பார்க்க

பாமகவில் நிலவும் குழப்பங்களுக்கு விரைவில் தீர்வு: ராமதாஸ்

விழுப்புரம்: பாமகவில் ஏற்பட்டுள்ள பிரச்னை, குழப்பங்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸ் தெரிவித்தார்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம... மேலும் பார்க்க

கமல் மன்னிப்பு கேட்க வேண்டும்: கிருஷ்ணசாமி

கன்னட மொழி குறித்த கருத்துக்கு நடிகா் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டு, தொடா்ந்து வரும் பிரச்னைக்கு முடிவுகட்ட வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவா் டாக்டா் க.கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்த... மேலும் பார்க்க