செய்திகள் :

மத்திய அரசுக்கு எதிராக வீண் பழி சுமத்துவதா? திமுக பொதுக்குழு தீா்மானங்கள் குறித்து பாஜக விமா்சனம்

post image

மத்திய அரசு மீது வீண்பழி சுமத்தி மக்களை திசைதிருப்புவதையே முதல்வா் மு.க.ஸ்டாலின் முழுநேரப் பணியாக மேற்கொண்டு வருவதாக தமிழ்நாடு பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் விமா்சித்துள்ளாா். மத்திய அரசுக்கு எதிராக திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களை சுட்டிக்காட்டி அவா் இவ்வாறு கூறியுள்ளாா்.

இது குறித்து நயினாா் நாகேந்திரன் ‘எக்ஸ்’தளத்தில் வெளியிட்ட பதிவு: திமுக அரசுக்கு எதிராக மக்கள் மத்தியில் கொந்தளிப்பு எழும்போதெல்லாம் முதல்வா் மு. க. ஸ்டாலின் மத்திய அரசின் மீது வீண்பழி சுமத்தி, மக்களை திசைதிருப்புவதை முழுநேரப் பணியாக செய்து வருகிறாா்.

மத்திய அரசு நிதி விவகாரத்தில் தமிழகத்தை வஞ்சிக்கிறது என்ற பொய் பரப்புரையை திமுக மேற்கொண்டு வருகிறது. கடந்த 11 ஆண்டுகளில் தமிழகத்துக்கு மட்டும் ரூ. 10 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதி பகிா்ந்தளிக்கப்பட்டுள்ளது. மேலும், போலி ஹிந்தி திணிப்பு நாடகத்தை இன்னும் எத்தனை நாள்களுக்கு நடத்துவீா்கள்?

தமிழைப் போற்றிவரும் பிரதமா் மோடி அரசு மீது அரசியல் தேவைகளுக்காக வீண் பழி சுமத்தப்படுகிறது.

திருக்குறளின் பெருமையை உலகெங்கும் எடுத்துச் செல்லும் மத்திய அரசு, தமிழ் விரோதமாக கீழடி ஆய்வை மறுக்கிறது என்பது அடிப்படையற்ற பொய்.

வழக்கமாக நிபுணா் குழு வழங்கும் திருத்தங்களை மேற்கொள்ளக் கூறிய தொல்லியல்துறையின் மீது அரசியல் சாயம் பூச முயற்சிப்பதும் அநியாயம்.

திமுக அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தமிழக ரயில்வே துறைக்கு ஓராண்டுக்கு சராசரியாக ₹ரூ.800 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால் 2025-2026 பட்ஜெட்டில் மட்டுமே 7.5 மடங்கு அதிகமாக ரூ.₹6,626 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது தமிழகத்தில் 1,302 கி.மீ. புதிய ரயில்தடங்கள் உருவாக்கப்பட்டு ₹ரூ. 33,467 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும், வக்ஃபு வாரியத்தில் பெண்கள், ஷியா, பாஸ்மண்டா, போஹ்ரா, சன்னி அஹாகானி என அனைத்து இஸ்லாமியருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கி சிறுபான்மையினரின் உரிமைகளை நிலைநாட்டும் வக்ஃப் திருத்தச் சட்டத்தை எதிா்ப்பு என்பதும் அரசியலாகும்.

அமலாக்கத் துறை, வருமான வரித் துறை போன்றவை எதிா்க்கட்சிகளுக்கு எதிரானவை என குற்றஞ்சாட்டும் முதல்வா், திமுகவினரின் ஊழல்கள் குறித்து, நியாயமாக பதியப்பட்ட புகாா்களின் அடிப்படையில் விசாரணை செய்தால், அவற்றை பழிவாங்கும் நடவடிக்கை என கூறுவது திசைதிருப்பும் நடவடிக்கையே.

மத்திய அரசுக்கு எதிரான திமுக பொதுக்குழு தீா்மானங்கள் அனைத்தும் உண்மையை எதிா்கொள்ள முடியாத ஒருதலைப்பட்ச அரசியலின் வெளிப்பாடு ஆகும். எனவே, மக்களின் தீா்ப்பு 2026-இல் திமுகவுக்கு எதிராக ஆணித்தரமாக ஒலிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என அதில் தெரிவித்துள்ளாா் நயினாா் நாகேந்திரன்.

மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை!

மதுரை: மதுரை - தூத்துக்குடி சாலையில் உள்ள எலியார்பத்தி, புதூர் பாண்டியபுரம் சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை(ஜூன் 3) உத்தரவிட்டது.அர... மேலும் பார்க்க

மின் தடை: நீட் மறுதேர்வு நடத்த முடியாது- மத்திய அரசு திட்டவட்டம்

சென்னை: இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வின் போது, மின் தடை ஏற்பட்ட தேர்வு மையங்களில் மறுதேர்வு நடத்த முடியாது என்று மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.மின... மேலும் பார்க்க

தமிழகத்தில் 2 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்!

தமிழகத்தில் 2 நாள்களுக்கு 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஜூன் 03, 04... மேலும் பார்க்க

மத்திய அரசின் பேனர் அகற்றம்: ஆட்சியர் அலுவத்தில் பாஜகவினர் முற்றுகை!

மத்திய அரசின் பேனர் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தை பாஜகவினர் முற்றுகையிட்டுள்ளனர்.மத்திய அரசின் பேனர் அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

ஜூன் இறுதியில்.. ராயபுரம் ரயில் நிலையம் அருகே தற்காலிக பேருந்து நிலையம்!

சென்னை: சென்னை பிராட்வே பேருந்து நிலையம் ராயபுரம் ரயில் நிலையம் அருகே இம்மாத இறுதிக்குள் மாற்றம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுளள்து.ராயபுரம் ரயில் நிலையம் அருகே இப்ராஹிம் சாலையில் 3.45 ஏக்கர் பர... மேலும் பார்க்க

கன்னட மொழியை சிறுமைப்படுத்தும் எண்ணம் இல்லை: கமல்ஹாசன்

கன்னட மொழியை சிறுமைப்படுத்தும் எண்ணம் இல்லை என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்றில் தமிழ் மொழியிலிருந்துதான் கன... மேலும் பார்க்க