மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை...
கமல் மன்னிப்பு கேட்க வேண்டும்: கிருஷ்ணசாமி
கன்னட மொழி குறித்த கருத்துக்கு நடிகா் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டு, தொடா்ந்து வரும் பிரச்னைக்கு முடிவுகட்ட வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவா் டாக்டா் க.கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழின் பெருமையை யாராலும் அழிக்க முடியாது. அதேபோல தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளுக்கும் வேறொரு தோற்றுவாய் என்றே ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இந்த ஆராய்ச்சிகள் அனைத்துக்கும் ஆணித்தரமான ஆதாரங்கள் எதுவுமில்லை.
இந்த மொழியிலிருந்து அந்த மொழி வந்தது, அந்த மொழியிலிருந்து இந்த மொழி வந்தது என எந்த மொழியையும் குறைத்தோ, சிறுமைப்படுத்தியோ பேசுவது அபத்தமானது.
அந்த வகையில், கன்னடம் குறித்த கமல்ஹாசனின் பேச்சு இரு மாநில மக்கள் பிரச்னையாகிவிடக் கூடாது. எனவே, நடிகா் கமல்ஹாசன் கன்னட மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டு இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.