செய்திகள் :

பாமகவில் நிலவும் குழப்பங்களுக்கு விரைவில் தீர்வு: ராமதாஸ்

post image

விழுப்புரம்: பாமகவில் ஏற்பட்டுள்ள பிரச்னை, குழப்பங்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸ் தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக, வன்னியர் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பாமக கெüரவத் தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்னுசாமி, வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பு.தா.அருள்மொழி, மாநில துணைத் தலைவர்கள் ஆறுமுகம், தங்க. அய்யாசாமி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். கட்சியின் செயல்பாடுகள், வன்னியர் சங்க மகளிர் மாநாடு நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பின்னர், ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வன்னியர் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் பூம்புகாரில் தமிழர் பெருவிழா நடத்தப்பட்டு வந்தது. பூம்புகாரில் நடைபெற்ற சீரமைப்புப் பணியால் தமிழர் திருவிழா நடத்தப்படவில்லை. வருகிற ஆகஸ்ட் 10}ஆம் தேதி பூம்புகாரில் வன்னியர் சங்க மகளிர் மாநில மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டுக் குழுத் தலைவராக பு.தா.அருள்மொழி செயல்படுவார்.

எல்லா பிரச்னைக்கும் தீர்வு உண்டு. பாமகவில் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கும், குழப்பங்களுக்கும் தீர்வு ஏற்படும் என நம்புகிறேன். கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தை நடத்துவது தொடர்பாக பின்னர் முடிவு எடுக்கப்படும். நிர்வாகிகள் மாற்றப்படுவது கட்சியின் புதிய நடைமுறை இல்லை. நன்றாக செயல்படுபவர்களுக்கு கட்சியில் பொறுப்பு வழங்கப்படும். கட்சி தொடங்கப்பட்டதுமுதல் சுமார் 46 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். என் பின்புலத்தில் இருந்தபடி, என்னை யாரும் இயக்க முடியாது. பாமகவில் ஏற்பட்டுள்ள பிரச்னையை பெரிதுபடுத்த வேண்டாம். பாமகவில் நிர்வாகிகள் போவதும், வருவதும் இயல்பானதுதான் என்றார் அவர்.

பேட்டியின்போது, பாமக தலைமை நிலையச் செயலர் அன்பழகன், தஞ்சை மாவட்டச் செயலர் ம.க.ஸ்டாலின் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

மின் தடை: நீட் மறுதேர்வு நடத்த முடியாது- மத்திய அரசு திட்டவட்டம்

சென்னை: இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வின் போது, மின் தடை ஏற்பட்ட தேர்வு மையங்களில் மறுதேர்வு நடத்த முடியாது என்று மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.மின... மேலும் பார்க்க

தமிழகத்தில் 2 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்!

தமிழகத்தில் 2 நாள்களுக்கு 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஜூன் 03, 04... மேலும் பார்க்க

மத்திய அரசின் பேனர் அகற்றம்: ஆட்சியர் அலுவத்தில் பாஜகவினர் முற்றுகை!

மத்திய அரசின் பேனர் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தை பாஜகவினர் முற்றுகையிட்டுள்ளனர்.மத்திய அரசின் பேனர் அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

ஜூன் இறுதியில்.. ராயபுரம் ரயில் நிலையம் அருகே தற்காலிக பேருந்து நிலையம்!

சென்னை: சென்னை பிராட்வே பேருந்து நிலையம் ராயபுரம் ரயில் நிலையம் அருகே இம்மாத இறுதிக்குள் மாற்றம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுளள்து.ராயபுரம் ரயில் நிலையம் அருகே இப்ராஹிம் சாலையில் 3.45 ஏக்கர் பர... மேலும் பார்க்க

கன்னட மொழியை சிறுமைப்படுத்தும் எண்ணம் இல்லை: கமல்ஹாசன்

கன்னட மொழியை சிறுமைப்படுத்தும் எண்ணம் இல்லை என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்றில் தமிழ் மொழியிலிருந்துதான் கன... மேலும் பார்க்க

மன்னிப்பு கேட்பதில் என்ன சிக்கல்? கமலுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

மன்னிப்பு கேட்பதில் என்ன சிக்கல் இருக்கிறது என்று நடிகர் கமல்ஹாசனுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி ஒன... மேலும் பார்க்க