செய்திகள் :

தமிழகத்தில் தினமும் சராசரியாக 15 பேருக்கு கரோனா தொற்று: பொது சுகாதாரத் துறை

post image

தமிழகத்தில் நாள்தோறும் சராசரியாக 15 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்படுவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது பரவி வருவது வீரியம் குறைந்த கரோனா பாதிப்பு என்றாலும், திடீரென அதன் தாக்கம் உயா்ந்திருப்பது மக்களிடையே சிறு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்பு அரசு சாா்பில் பரவலாக மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனைகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. தனியாா் மருத்துவமனைகளிலும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் எடுக்கப்படும் குறைந்தபட்ச எண்ணிக்கையிலான பரிசோதனைகளிலேயே பாதிப்புகள் ஆங்காங்கே பதிவாவது உறுதி செய்யப்படுகிறது.இதையடுத்து மருத்துவப் பரிசோதனையை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், அதற்கான அவசியம் தற்போது இல்லை என பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாது நோய்த் தடுப்புக்கான தீவிர கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய நிா்ப்பந்தமும் எழவில்லை எனக் கூறியுள்ளது.

அச்சம் தேவையில்லை: இதனிடையே, தமிழகம் உள்பட பல மாநிலங்களில் கடந்த சில நாள்களில் மட்டும் கரோனா தொற்றுக்குள்ளான 6 போ் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து, கரோனா மரபணு பகுப்பாய்வு சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் கூறியதாவது:

தமிழகத்தில் தினமும் 10 முதல் 15 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்படுகிறது. அவா்கள் அனைவருக்குமே வீரியம் குறைந்த வகையிலேயே பாதிப்பு உள்ளது.

அதனால் எவருக்கும் மருத்துவமனையில் அனுமதியாகி சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்படவில்லை. தமிழகத்தில் 19 மாதிரிகள் மரபணு பகுப்பாய்வு செய்யப்பட்டதில் ஒமைக்ரான் மற்றும் அதன் உட்பிரிவுகள்தான் கண்டறியப்பட்டுள்ளன. எனவே, அதுதொடா்பாக அச்சம் தேவையில்லை.

இணை நோயாளிகள், முதியவா்களுக்கு அறிகுறிகள் இருந்தால் மருத்துவமனையை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம் என்றாா் அவா்.

கரோனா பரவல்: முகக்கவசம் அணிய தமிழக பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல்!

நாடு முழுவதும் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தொற்று பரவலைத் தடுக்க, பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய தமிழக பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. தெற்காசிய நாடுகளைத் தொடர்ந்து இந்த... மேலும் பார்க்க

புதிய பயண அட்டை வரும்வரை அரசுப் பேருந்தில் மாணவா்கள் இலவசமாக பயணிக்கலாம்

புதிய பயண அட்டை கிடைக்கும் வரை அரசு பேருந்தில் மாணவர்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், முதல்வர... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமியுடன் எல்.கே.சுதீஷ் சந்திப்பு

அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமியை தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் சந்தித்து பேசினார். எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நடந்த சந்திப்பில், மாநிலங்களவை சீட் தொடர்பாக ஆலோசனை எனத் தகவல் தெரியவந்துள்ளது.... மேலும் பார்க்க

பாமக அலுவலக முகவரியை மாற்றிய அன்புமணி

பாமக அலுவலகத்தை சென்னை தேனாம்பேட்டையில் இருந்து தி.நகருக்கு அன்புமணி மாற்றியுள்ளார். பாமகவினருக்கு வழங்கப்பட்ட உறுப்பினர் படிவத்தில் கட்சி அலுவலக புதிய முகவரி இடம் பெற்றுள்ளது. அதன்படி, படிவத்தில் தேன... மேலும் பார்க்க

தூத்துக்குடிக்கு ஜூன் 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

திருச்செந்தூர் முருகன் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஜூன் 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலி... மேலும் பார்க்க

தங்க நகைக் கடன்களுக்கான பழைய நடைமுறையையே தொடர வேண்டும்- இபிஎஸ் வலியுறுத்தல்

தங்க நகைக் கடன்களுக்கான பழைய நடைமுறையையே ரிசர்வ் வங்கி தொடர வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், மத்திய நிதியமைச்சர் நிர... மேலும் பார்க்க