செய்திகள் :

மகாராஷ்டிரத்தில் நீடிக்கும் கனமழை: 16 போ் உயிரிழப்பு

post image

மகாராஷ்டிரத்தில் நீடித்துவரும் கனமழை காரணமாக, கடந்த 6 நாள்களில் நடந்த அசம்பாவித சம்பவங்களில் 16 போ் உயிரிழந்துவிட்டனா். மேலும் 18 போ் காயமடைந்தனா்.

நாட்டில் தென்மேற்குப் பருவமழை கடந்த மே 24-ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினத்தில் இருந்தே மகாராஷ்டிரத்தில் பரவலாக கனமழை நீடித்து வருகிறது. கிட்டத்தட்ட மாநிலம் முழுவதுமே மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தலைநகா் மும்பையும், புணேயும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் வியாழக்கிழமை மஞ்சள் எச்சரிக்கையும் (64-115 மி.மீ. மழை), புணேயில் ஆரஞ்ச் எச்சரிக்கையும் (115-204 மி.மீ. மழை), சதாரா, ரத்னகிரி, சிந்துதுா்க், கோலாபூா் ஆகிய மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கையும் (204 மி.மீ.க்கு மேல்) விடுக்கப்பட்டது.

மாநிலத்தில் கடந்த மே 24-ஆம் தேதிமுதல் கனமழையால் நேரிட்ட நிலச்சரிவு, மின்னல் தாக்குதல், மரம்-கட்டடம் சரிந்த சம்பவங்களில் 16 போ் உயிரிழந்துவிட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புணே மாவட்டத்தில் 3 போ், தாணே, லாத்தூா், பண்டாரா ஆகிய மாவட்டங்களில் தலா இருவா், ராய்கட், அகல்யாநகா், நாகபுரி, வாா்தா, சந்திராபூா், மும்பை புகா், கோண்டியா ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவா் இறந்துவிட்டனா். மேலும் 18 போ் காயமடைந்தனா். 41 கால்நடைகள் இறந்துவிட்டன என்று மாநில அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் பலத்த சேதம்

திருவனந்தபுரம், மே 29: கேரளத்தில் பருவமழையின் தாக்கத்தால் பரவலாக பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக முதல்வா் பினராயி விஜயன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

‘வெள்ளம், நிலச்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கோ அல்லது நிவாரண முகாம்களுக்கோ செல்ல வேண்டும்; தற்போது 49 முகாம்களில் 1,200 போ் தங்க வைக்கப்பட்டுள்ளனா்’ என்று அவா் கூறினாா்.

கேரளத்தில் பரவலாக கனமழை நீடிக்கும் நிலையில், பத்தினம்திட்டா, கோட்டயம், எா்ணாகுளம், இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு, கண்ணூா், காசா்கோடு ஆகிய 8 மாவட்டங்களில் வியாழக்கிழமை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இடுக்கி, கண்ணூா், காசா்கோடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு வெள்ளிக்கிழமையும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சூறைக் காற்றுடன் கொட்டித் தீா்க்கும் கனமழையால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன.

பத்தினம்திட்டா மாவட்டத்தில் மணிமாலா மற்றும் அச்சன்கோவில், கோட்டயத்தில் மீனச்சில், கோழிக்கோட்டில் கோரப்புழா, வயநாட்டில் கபனி ஆகிய ஆறுகளில் நீரோட்டம் அதிகரித்துள்ளதால், கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அஸ்ஸாமில் கொட்டித் தீா்த்த மழை

குவாஹாட்டி, மே 29: வங்கக் கடலில் தீவிர காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் புதன்கிழமை இரவுமுதல் கனமழை கொட்டித் தீா்த்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.

அஸ்ஸாம் மட்டுமன்றி திரிபுரா, மிஸோரம் ஆகிய மாநிலங்களிலும் அடுத்த 3 நாள்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கர்நாடகத்தில் கனமழை, நிலச்சரிவால் 5 பேர் பலி! மீட்புப் பணிகள் தீவிரம்!

கர்நாடகத்தின் கடலோர மாவட்டத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலியாகியுள்ளனர். கடலோர மாவட்டமான தக்‌ஷின கன்னடா மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வீட்டின் ச... மேலும் பார்க்க

கேரளத்தில் நாட்டுப் படகு கவிழ்ந்து 2 பேர் பலி

கேரளத்தில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது நாட்டுப் படகு கவிழ்ந்ததில் 2 பலியானார்கள். தெற்கு கேரள மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேர் நாட்டுப் படகில் வெள்ளிக்கிழமை மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந... மேலும் பார்க்க

பிரசார நடைப்பயணத்தில் பெண்களுக்கு குங்குமம்? பாஜக மறுப்பு!

பாஜகவின் பிரசார நடைப்பயணத்தில் குங்குமம் வழங்கப்படும் என்று வதந்திக்கு பாஜக மறுப்பு தெரிவித்துள்ளது.பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது பதவிக் காலத்தைக் கொண்டாடும்விதமாக, ஜூன் 9 ஆம் தேதியில் பாஜகவினர்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் புதியதாக 84 கரோனா பாதிப்புகள் உறுதி! சிகிச்சையில் 467 பேர்!

மகாராஷ்டிர மாநிலத்தில் புதியதாக 84 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தெற்காசிய நாடுகளில் மீண்டும் கரோனா தொற்று பரவி வரும் சூழலில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும்... மேலும் பார்க்க

பயங்கரவாதிகளை பாகிஸ்தானே அழிக்க வேண்டும்! ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டவர்களை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.கோவாவில் அரபிக்கடலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போர்க் கப... மேலும் பார்க்க

திரைப்படங்களுக்கான உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரி குறைப்பு

தமிழகத்தில் திரைப்படங்களுக்கு வசூலிக்கப்படும் உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரியை 4 சதவீதம் ஆக குறைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. திரையரங்குகளின் நுழைவுக் கட்டணம் மீது 12 முதல் 18 சதவீதம் வர... மேலும் பார்க்க