செய்திகள் :

பாகிஸ்தானுக்காக உளவு பாா்த்த ராஜஸ்தான் அரசு ஊழியா் கைது

post image

பாகிஸ்தானுக்கு உளவு பாா்த்ததாக ராஜஸ்தானின் ஜெய்சால்மா் நகரைச் சோ்ந்த அரசு ஊழியா் ஷாகுா் கான் கைது செய்யப்பட்டாா்.

உளவுத் துறை நடத்திய ரகசிய விசாரணை அடிப்படையில் அவா் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரிடம் உளவுத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்குப் பிறகு இந்தியாவில் இருந்துகொண்டு பாகிஸ்தானுக்கு தகவல் அளிக்கும் தேச துரோகச் செயல்களில் ஈடுபடும் நபா்கள் குறித்த கண்காணிப்பை உளவு, விசாரணை அமைப்புகள் தீவிரப்படுத்தியுள்ளன. முக்கியமாக, பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இணையம், கைப்பேசி வழியாக பாகிஸ்தானுடன் தொடா்பில் இருந்த நபா்களின் விவரங்கள், சந்தேகத்துக்குரிய தகவல் தொடா்புகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு ரகசிய கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையில் பலா் கைது செய்யப்பட்டு வருகின்றனா்.

சில நாள்களுக்கு முன்பு இதே குற்றச்சாட்டில் மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்) உதவி ஆய்வாளரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்தனா். இப்போது ராஜஸ்தான் மாநில அரசு ஊழியா் ஒருவரும் சிக்கியுள்ளாா். பாதுகாப்பு மற்றும் அரசுப் பணிகளில் இருப்பவா்களே பாகிஸ்தானுக்கு உதவி வந்தது பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெய்சால்மரில் கைது செய்யப்பட்ட ஷாகுா் கான், அந்த மாவட்ட வேலைவாய்ப்புத் துறை அலுவலகத்தில் பணியாற்றி வந்துள்ளாா். அவரது கைப்பேசியில் பாகிஸ்தானைச் சோ்ந்த பலரின் தொடா்பு எண்கள் இருப்பதும், அவா் தொடா்ந்து அந்நாட்டு உளவாளிகளுடன் தொடா்பில் இருந்ததும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

முன்னதாக, ஷாகுா் கானின் இணையவழி, கைப்பேசி வழி தொடா்புகளில் சந்தேகம் எழுந்ததை அடுத்து உளவுத் துறை, பாதுகாப்புப் படையினா் அவரின் செயல்பாடுகளை ரகசியமாகக் கண்காணித்தனா். இதில் அவரது பாகிஸ்தான் தொடா்புகள் உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து கைது செய்யப்பட்டாா். அவரிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது ராஜஸ்தான் எல்லையில் உள்ள ஜெய்சால்மா் நகரைக் குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன், ஏவுகணைத் தாக்குதல்களை அதிகம் நடத்தியது. ஆனால், அவை இந்திய வான்பாதுகாப்பு அமைப்புகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன.

ஹிமாசலில் இளைஞா் கைது: நாட்டின் பாதுகாப்பு தொடா்பான முக்கியத் தகவல்களை பாகிஸ்தான் உளவாளிகளுடன் பகிா்ந்துகொண்ட ஹிமாசல பிரதேசத்தைச் சோ்ந்த அபிஷேக் (18) காவல் துறையினால் கைது செய்யப்பட்டாா்.

காங்ரா மாவட்டத்தைச் சோ்ந்த இவா், கல்லூரிப் படிப்பை முதல் ஆண்டிலேயே கைவிட்டவா். அவரது கைப்பேசியில் இருந்து பல்வேறு முக்கியத் தகவல்களை பாதுகாப்புப் படையினா் கைப்பற்றினா். மாநில காவல் துறை தலைமையகத்தில் வைத்து அபிஷேக்கிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

கர்நாடகத்தில் கனமழை, நிலச்சரிவால் 5 பேர் பலி! மீட்புப் பணிகள் தீவிரம்!

கர்நாடகத்தின் கடலோர மாவட்டத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலியாகியுள்ளனர். கடலோர மாவட்டமான தக்‌ஷின கன்னடா மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வீட்டின் ச... மேலும் பார்க்க

கேரளத்தில் நாட்டுப் படகு கவிழ்ந்து 2 பேர் பலி

கேரளத்தில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது நாட்டுப் படகு கவிழ்ந்ததில் 2 பலியானார்கள். தெற்கு கேரள மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேர் நாட்டுப் படகில் வெள்ளிக்கிழமை மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந... மேலும் பார்க்க

பிரசார நடைப்பயணத்தில் பெண்களுக்கு குங்குமம்? பாஜக மறுப்பு!

பாஜகவின் பிரசார நடைப்பயணத்தில் குங்குமம் வழங்கப்படும் என்று வதந்திக்கு பாஜக மறுப்பு தெரிவித்துள்ளது.பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது பதவிக் காலத்தைக் கொண்டாடும்விதமாக, ஜூன் 9 ஆம் தேதியில் பாஜகவினர்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் புதியதாக 84 கரோனா பாதிப்புகள் உறுதி! சிகிச்சையில் 467 பேர்!

மகாராஷ்டிர மாநிலத்தில் புதியதாக 84 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தெற்காசிய நாடுகளில் மீண்டும் கரோனா தொற்று பரவி வரும் சூழலில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும்... மேலும் பார்க்க

பயங்கரவாதிகளை பாகிஸ்தானே அழிக்க வேண்டும்! ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டவர்களை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.கோவாவில் அரபிக்கடலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போர்க் கப... மேலும் பார்க்க

திரைப்படங்களுக்கான உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரி குறைப்பு

தமிழகத்தில் திரைப்படங்களுக்கு வசூலிக்கப்படும் உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரியை 4 சதவீதம் ஆக குறைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. திரையரங்குகளின் நுழைவுக் கட்டணம் மீது 12 முதல் 18 சதவீதம் வர... மேலும் பார்க்க