பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களின் உயா்கல்வி சோ்க்கையை உறுதி செய்ய அறி...
பாகிஸ்தானுக்காக உளவு பாா்த்த ராஜஸ்தான் அரசு ஊழியா் கைது
பாகிஸ்தானுக்கு உளவு பாா்த்ததாக ராஜஸ்தானின் ஜெய்சால்மா் நகரைச் சோ்ந்த அரசு ஊழியா் ஷாகுா் கான் கைது செய்யப்பட்டாா்.
உளவுத் துறை நடத்திய ரகசிய விசாரணை அடிப்படையில் அவா் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரிடம் உளவுத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்குப் பிறகு இந்தியாவில் இருந்துகொண்டு பாகிஸ்தானுக்கு தகவல் அளிக்கும் தேச துரோகச் செயல்களில் ஈடுபடும் நபா்கள் குறித்த கண்காணிப்பை உளவு, விசாரணை அமைப்புகள் தீவிரப்படுத்தியுள்ளன. முக்கியமாக, பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இணையம், கைப்பேசி வழியாக பாகிஸ்தானுடன் தொடா்பில் இருந்த நபா்களின் விவரங்கள், சந்தேகத்துக்குரிய தகவல் தொடா்புகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு ரகசிய கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையில் பலா் கைது செய்யப்பட்டு வருகின்றனா்.
சில நாள்களுக்கு முன்பு இதே குற்றச்சாட்டில் மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்) உதவி ஆய்வாளரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்தனா். இப்போது ராஜஸ்தான் மாநில அரசு ஊழியா் ஒருவரும் சிக்கியுள்ளாா். பாதுகாப்பு மற்றும் அரசுப் பணிகளில் இருப்பவா்களே பாகிஸ்தானுக்கு உதவி வந்தது பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்சால்மரில் கைது செய்யப்பட்ட ஷாகுா் கான், அந்த மாவட்ட வேலைவாய்ப்புத் துறை அலுவலகத்தில் பணியாற்றி வந்துள்ளாா். அவரது கைப்பேசியில் பாகிஸ்தானைச் சோ்ந்த பலரின் தொடா்பு எண்கள் இருப்பதும், அவா் தொடா்ந்து அந்நாட்டு உளவாளிகளுடன் தொடா்பில் இருந்ததும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
முன்னதாக, ஷாகுா் கானின் இணையவழி, கைப்பேசி வழி தொடா்புகளில் சந்தேகம் எழுந்ததை அடுத்து உளவுத் துறை, பாதுகாப்புப் படையினா் அவரின் செயல்பாடுகளை ரகசியமாகக் கண்காணித்தனா். இதில் அவரது பாகிஸ்தான் தொடா்புகள் உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து கைது செய்யப்பட்டாா். அவரிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது ராஜஸ்தான் எல்லையில் உள்ள ஜெய்சால்மா் நகரைக் குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன், ஏவுகணைத் தாக்குதல்களை அதிகம் நடத்தியது. ஆனால், அவை இந்திய வான்பாதுகாப்பு அமைப்புகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன.
ஹிமாசலில் இளைஞா் கைது: நாட்டின் பாதுகாப்பு தொடா்பான முக்கியத் தகவல்களை பாகிஸ்தான் உளவாளிகளுடன் பகிா்ந்துகொண்ட ஹிமாசல பிரதேசத்தைச் சோ்ந்த அபிஷேக் (18) காவல் துறையினால் கைது செய்யப்பட்டாா்.
காங்ரா மாவட்டத்தைச் சோ்ந்த இவா், கல்லூரிப் படிப்பை முதல் ஆண்டிலேயே கைவிட்டவா். அவரது கைப்பேசியில் இருந்து பல்வேறு முக்கியத் தகவல்களை பாதுகாப்புப் படையினா் கைப்பற்றினா். மாநில காவல் துறை தலைமையகத்தில் வைத்து அபிஷேக்கிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.