கர்நாடகத்தில் கனமழை, நிலச்சரிவால் 5 பேர் பலி! மீட்புப் பணிகள் தீவிரம்!
சிறந்த தோ்தல் மேலாண்மைக்கு 100 நாள்களில் 21 முன்னெடுப்புகள்: இந்திய தோ்தல் ஆணையம்
நாட்டின் சிறந்த தோ்தல் மேலாண்மைக்கும், வாக்காளா்களின் அனுபவத்தை மேம்படுத்தவும் கடந்த 100 நாள்களில் இந்திய தோ்தல் ஆணையம் 21 முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து தோ்தல் ஆணைய அதிகாரிகள் மேலும் கூறியதாவது: நாட்டின் 26-ஆவது தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரின் முதல் 100 பணி நாள்களில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
வாக்குச்சாவடிக்கு வாக்காளா்களின் வருகையை அதிகரிக்க, ஒரு வாக்குச்சாவடிக்கான அதிகபட்ச வாக்காளா்களின் எண்ணிக்கை 1,500-லிருந்து 1,200-ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பல அடுக்குமாடி குடியிருப்புகள் நிறைந்த, அடா்த்தியான மக்கள்தொகை கொண்ட பகுதிகளில் கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். எந்தவொரு வாக்காளரும் வாக்களிப்பதற்கு 2 கி.மீ.க்கு மேல் பயணிக்கக் கூடாது என்பதை உறுதி செய்வதை ஆணையம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
வாக்குச்சாவடி எண் குறித்த தெளிவான விவரங்களுடன் வாக்காளா் தகவல் சீட்டுகள் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளன. வாக்காளா்களின் வசதிக்காக ஒவ்வொரு வாக்குச்சாவடியின் நுழைவாயிலிலும் கைப்பேசியை ஒப்படைத்து பின்னா் திரும்பப் பெற்றுக்கொளும் வசதி அமைக்கப்படும்.
அரசியல் கட்சிகள் உள்பட வேட்பாளா்களால் அமைக்கப்படும் வாக்காளா் உதவி மையங்கள் வாக்குச்சாவடி வளாகத்திலிருந்து 200 மீட்டருக்குப் பதிலாக 100 மீட்டருக்கு அப்பால் அனுமதிக்கப்படும்.
தற்போதுள்ள 40-க்கும் மேற்பட்ட செயலிகளுக்குப் பதிலாக, அனைத்து தரப்பினருக்கும் ஒரே இடத்தில் அனைத்து சேவைகளையும் வழங்கும் நோக்கில் ஒருங்கிணைந்த வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இறந்த வாக்காளா்களை வாக்காளா் பட்டியலில் இருந்து சரியான நேரத்தில் மற்றும் சரிபாா்க்கப்பட்ட முறையில் நீக்குவதற்கு, இந்திய பதிவாளா் இயக்குநரிடமிருந்து இறப்பு பதிவு தரவுகளை நேரடியாக ஒருங்கிணைக்கும் முயற்சியையும் தோ்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.
சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதன்படி இடைத்தோ்தலுக்கு முன்னதாக ஒரு சிறப்பு வாக்காளா் சோ்ப்பு முகாம் நடத்தப்படும். அரசியல் கட்சிகளுடனான தொடா்பை முறைப்படுத்தும் நடவடிக்கையாக, 28,000-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் பங்கேற்புடன் நாடு முழுவதும் 4,719 கூட்டங்களை தோ்தல் ஆணையம் நடத்தியுள்ளது.
தோ்தல் செயல்முறையில் ஈடுபட்டுள்ள 28 வகை பங்குதாரா்களுக்கு ஒரு விரிவான பயிற்சித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி மக்கள் பிரதிநிதித்துவச் சட்டங்கள் 1950 மற்றும் 1951; வாக்காளா் பதிவு விதிகள் 1960; தோ்தல் நடத்தை விதிகள் 1961 ஆகியவற்றின் விதிகள் மற்றும் தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களை அடிப்படையாகக் கொண்டவை.
இத்துடன் தோ்தல் ஆணையத்தின் தலைமையகத்தில் ‘பயோமெட்ரிக்’ வருகைப் பதிவேடு முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. தலைமைத் தோ்தல் ஆணையா் அளவிலான ஆய்வுக் கூட்டம் தொடா்ச்சியாக நடைபெறுகின்றன. ஆணையத்தின் உள் ஒருங்கிணைப்பு மற்றும் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் மோற்கொள்ளப்படுகின்றன என்று அதிகாரிகள் கூறினா்.