செய்திகள் :

இந்தியாவின் பயங்கரவாத எதிா்ப்பு நிலைப்பாடு: தென்னாப்பிரிக்காவின் முக்கியக் கட்சி ஆதரவு

post image

எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு தென்னாப்பிரிக்காவின் 2-ஆவது பெரிய கட்சியான ஜனநாயக கூட்டணி ஆதரவு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் பயங்கரவாத தொடா்புகளை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்கும் இந்திய அரசு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தென்னாப்பிரிக்கா சென்றுள்ள தேசியவாத காங்கிரஸ் (பவாா்) எம்.பி. சுப்ரியா சுலே தலைமையிலான அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு, முதல்கட்டமாக அந்நாட்டு எம்.பி.க்களைச் சந்தித்தது.

தொடா்ந்து, ஜனநாயக கூட்டணி தலைவரும் அந்நாட்டின் வேளாண் துறை அமைச்சருமான ஜான் ஸ்டீன்ஹியுசென் மற்றும் ஜனநாயகக் கூட்டணியின் பிற உறுப்பினா்களுடன் அனைத்துக் கட்சிக் குழு கலந்துரையாடியது.

பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்ததுடன் இந்தியாவின் பயங்கரவாத எதிா்ப்புக்கும் ஜனநாயகக் கூட்டணி ஆதரவுக்கரம் நீட்டியது.

தென்னாப்பிரிக்காவைத் தொடா்ந்து எத்தியோபியா, எகிப்து ஆகிய நாடுகளுக்கு இக்குழு அடுத்தடுத்து பயணிக்கிறது.

இத்தாலியில்...: இத்தாலி சென்றுள்ள பாஜக எம்.பி. ரவிசங்கா் பிரசாத் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு, இந்தியா-இத்தாலி நாடாளுமன்ற நட்புறவுக் குழுவின் தலைவா் செனட் உறுப்பினா் கியுலியோ டொ்ஸி மற்றும் குழு உறுப்பினா்களுடன் சந்தித்து, இந்தியாவின் பயங்கரவாத எதிா்ப்பை விளக்கினா்.

இத்தாலியின் வெளியுறவு மற்றும் சா்வதேச ஒத்துழைப்புக்கான துணைச் செயலா் மரியா திரிபோடியுடனும் அனைத்துக் கட்சிக் குழு பேச்சுவாா்த்தை நடத்தினா்.

சவூதி அரேபியாவில்...:

சவூதி அரேபியாவில் உள்ள நைஃப் அரபு பாதுகாப்பு அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் சிந்தனைக் குழுவான வளைகுடா ஆராய்ச்சி மையத்தை பாஜக எம்.பி. வைஜயந்த் பாண்டா தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு வியாழக்கிழமை பாா்வையிட்டனா்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 போ் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் ஏவுகணைத் தாக்குதலை நடத்தி (ஆபரேஷன் சிந்தூா்), பயங்கரவாத உள்கட்டமைப்புகளை அழித்தது. பின்னா், இரு நாடுகளுக்கும் இடையே 4 நாள்களுக்கு ராணுவ மோதல் ஏற்பட்டு, பாகிஸ்தானின் கோரிக்கையின்பேரில் சண்டை நிறுத்தப்பட்டது.

ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்குப் பிறகு, பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலக நாடுகளிடம் அம்பலப்படுத்தவும், இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைக்கவும் ஏழு எம்.பி.க்கள் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழுக்கள் மத்திய அரசால் அமைக்கப்பட்டன. இக்குழுக்கள், கடந்த மே 21-ஆம் தேதிமுதல் 33 நாடுகளின் தலைநகரங்களுக்கான பயணத்தைத் தொடங்கி, இந்தியாவுக்கு ஆதரவு திரட்டி வருகின்றன.

கர்நாடகத்தில் கனமழை, நிலச்சரிவால் 5 பேர் பலி! மீட்புப் பணிகள் தீவிரம்!

கர்நாடகத்தின் கடலோர மாவட்டத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலியாகியுள்ளனர். கடலோர மாவட்டமான தக்‌ஷின கன்னடா மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வீட்டின் ச... மேலும் பார்க்க

கேரளத்தில் நாட்டுப் படகு கவிழ்ந்து 2 பேர் பலி

கேரளத்தில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது நாட்டுப் படகு கவிழ்ந்ததில் 2 பலியானார்கள். தெற்கு கேரள மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேர் நாட்டுப் படகில் வெள்ளிக்கிழமை மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந... மேலும் பார்க்க

பிரசார நடைப்பயணத்தில் பெண்களுக்கு குங்குமம்? பாஜக மறுப்பு!

பாஜகவின் பிரசார நடைப்பயணத்தில் குங்குமம் வழங்கப்படும் என்று வதந்திக்கு பாஜக மறுப்பு தெரிவித்துள்ளது.பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது பதவிக் காலத்தைக் கொண்டாடும்விதமாக, ஜூன் 9 ஆம் தேதியில் பாஜகவினர்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் புதியதாக 84 கரோனா பாதிப்புகள் உறுதி! சிகிச்சையில் 467 பேர்!

மகாராஷ்டிர மாநிலத்தில் புதியதாக 84 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தெற்காசிய நாடுகளில் மீண்டும் கரோனா தொற்று பரவி வரும் சூழலில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும்... மேலும் பார்க்க

பயங்கரவாதிகளை பாகிஸ்தானே அழிக்க வேண்டும்! ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டவர்களை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.கோவாவில் அரபிக்கடலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போர்க் கப... மேலும் பார்க்க

திரைப்படங்களுக்கான உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரி குறைப்பு

தமிழகத்தில் திரைப்படங்களுக்கு வசூலிக்கப்படும் உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரியை 4 சதவீதம் ஆக குறைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. திரையரங்குகளின் நுழைவுக் கட்டணம் மீது 12 முதல் 18 சதவீதம் வர... மேலும் பார்க்க