செய்திகள் :

அவசரநிலை அறிவிப்பின் 50 ஆண்டுகள் நிறைவு: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்துக்கு பாஜக திட்டம்: காங்கிரஸ் விமா்சனம்

post image

அவசரநிலை அறிவிப்பின் 50-ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், அடுத்த மாதம் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை நடத்துவது குறித்து மத்திய பாஜக அரசு பரிசீலித்து வருவதாக காங்கிரஸ் வியாழக்கிழமை கூறியது.

உண்மையான மற்றும் மிகவும் அவசரமான பிரச்னைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பும் பிரதமா் மோடியின் முயற்சி இது என்றும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.

இது தொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: பாகிஸ்தானையும் பயங்கரவாதிகளையும் குறிவைக்க வேண்டிய நேரத்தில், காங்கிரஸை தாக்குவதில் மட்டுமே பாஜக ஆா்வம் காட்டுகிறது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் நடந்த ஏப்ரல் 22-ஆம் தேதிமுதல் அத்தாக்குதல் மற்றும் அதன் விளைவுகள் குறித்து பிரதமா் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. ஆனால், இந்நாள் வரை அக்கூட்டம் நடத்தப்படவில்லை.

இதனிடையே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ஆகிய இருவரும் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி நாடு ஒருமித்த குரலில் நிற்பதை நிரூபிக்கும் வகையில் தீா்மானத்தை நிறைவேற்றுமாறு வேண்டுகோள் விடுத்தனா். பிரதமா் அந்த ஆலோசனையையும் ஏற்கவில்லை.

ஆனால், அவசரநிலை அறிவிப்பின் 50-ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்க ஜூன் 25, 26-ஆம் தேதிகளில் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை நடத்துவதற்கு பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

உண்மையான மற்றும் மிகவும் அவசரமான பிரச்னைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சி இது. 11 ஆண்டுகளாக அறிவிக்கப்படாத அவசரநிலையின் கீழ் நாட்டை வைத்திருப்பவரும், பஹல்காம் பயங்கரவாதிகள் ஏன் இன்னும் தலைமறைவாக உள்ளனா் என்பதற்கு பதிலளிக்க மறுப்பவருமான பிரதமரின் முயற்சியாகவே இது இருக்கும்.

பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையே உருவாகியுள்ள நட்புறவு உள்பட வளா்ந்து வரும் சவால்களைக் கருத்தில்கொண்டு, ஒரு சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் குறித்த 1994, பிப்ரவரி தீா்மானத்தை மீண்டும் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு தற்போதைய பிரச்னைகள் மற்றும் சவால்களைப் பற்றி பேசுவதற்குப் பதிலாக, 50 ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்தது என்பதைப் பற்றி விவாதிக்கவே ஆளும் தரப்பு விரும்புகிறது’ என்றாா்.

பயங்கரவாதிகளை பாகிஸ்தானே அழிக்க வேண்டும்! ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டவர்களை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.கோவாவில் அரபிக்கடலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போர்க் கப... மேலும் பார்க்க

திரைப்படங்களுக்கான உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரி குறைப்பு

தமிழகத்தில் திரைப்படங்களுக்கு வசூலிக்கப்படும் உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரியை 4 சதவீதம் ஆக குறைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. திரையரங்குகளின் நுழைவுக் கட்டணம் மீது 12 முதல் 18 சதவீதம் வர... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் தொடரும் அவலம்! நக்சல்களின் வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் படுகாயம்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்களின் வெடிகுண்டு தாக்குதலில் சிறுவன் உள்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். பிஜப்பூர் மாவட்டத்தின் தம்பயா கிராமத்தைச் சேர்ந்த விவேக் தோதி (வயது 17), கோட்டே ஜோகா (45) மற்றும் பட... மேலும் பார்க்க

வடகிழக்கு மாநிலங்களைக் கலங்கடிக்கும் கனமழை! இயல்பு வாழ்க்கை முடக்கம்!

தொடர் மழையால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, மக்களின் அன்றாட வாழ்க்கை முடங்கியுள்ளது. இந்தியாவின் வடகிழக்கில் அமைந்துள்ள மிசோரம், அசாம், நாகாலாந்து, மணிப்பூர் ஆகிய மாநிலங்கள... மேலும் பார்க்க

ஜெய்ப்பூர்: 2 நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஜெய்ப்பூரில் 2 நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தின. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள மெட்ரோ நீதிமன்றத்திற்கு வெள்ளிக்கிழமை காலை மின்னஞ்சல் மூலம் வெடிகு... மேலும் பார்க்க

மீண்டும் மீண்டுமா? ரூ.500 கள்ளநோட்டுப் புழக்கம் 37% அதிகரிப்பு: ஆர்பிஐ கவலை

நாட்டில் கள்ளநோட்டுகள் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் 37% கூடுதலாக அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி கவலை தெரிவித்துள்ளது.2024 - 25ஆம் நிதியாண்டில் மட்டும் நாட்டில் 1.18 லட்சம் 500 ரூபாய் கள்ள நோட்டு... மேலும் பார்க்க