செய்திகள் :

உ.பி: மருத்துவர், செவிலியர், படுக்கைக்கூட இல்லை... அரசு மருத்துவமனையில் தரையில் நடந்த பிரசவம்!

post image

பிரசவம் என்பது ஒரு பெண்ணுக்கு மறுபிறப்பு என்பார்கள். கர்ப்பிணி என்றாலே எல்லோருக்கும் இயற்கையாகவே மனதில் ஒரு அன்பும், பரிவும் ஏற்பட்டுவிடும். அதனால்தான் ஒவ்வொரு மாநில அரசும் கர்ப்பிணிகளுக்கென பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2011 முதல் ஜனனி ஷிஷு சுரக்ஷா காரியக்ரம் (JSSK) போன்ற திட்டங்களை அரசு தொடங்கியது. இந்த திட்டத்தின் நோக்கம் கர்ப்பிணிகளுக்கு இலவச மற்றும் பாதுகாப்பான பிரசவ சேவைகளை வழங்குவதும், அதன் மூலம் தாய் மற்றும் குழந்தை இறப்பு விகிதங்களைக் குறைப்பதாகும். ஆனால், அந்தத் திட்டங்கள் வெறும் பெயரளவில், காகிதத்தில் மட்டுமே இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலம், பாலியா மாவட்டத்தில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பிரசவ வலியுடன் வந்திருக்கிறார். ஆனால் மருத்துவமனையில், ஒரு மருத்துவரோ, செவிலியரோ இல்லை. அவ்வளவு ஏன் படுக்கை வசதியைக்கூட காணவில்லை. வேறு வழியே இல்லாமல் தரையில் அமர்ந்து தன் குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அரசின் திட்டங்கள் என்னவானது எனப் பலரும் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

இத்தனைக்கும், பாலியா மாவட்டத்தில் உத்தரப்பிரதேச அரசின் இரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள். ஆனால் மாவட்டத்தின் சுகாதார சேவைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள்கூட கிடைக்காத நிலையில், இந்தத் தலைவர்கள் தங்கள் தொகுதிக்கு என்ன செய்தார்கள் என்று சமூக ஊடகங்களில் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நாட்றம்பள்ளி: முக்கிய பேருந்து நிறுத்தம்; ஆனால் நிழற்குடை? - கோரிக்கை வைக்கும் பொதுமக்கள்!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள நாட்றம்பள்ளி பகுதியில், தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால், பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இப்பகு... மேலும் பார்க்க

வேலூர்: சாலையோரத்தில் தோண்டப்பட்ட பள்ளம்; அச்சத்தில் வாகன ஓட்டிகள் - அலட்சியம் வேண்டாமே அதிகாரிகளே!

வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு அருகே அமைந்திருக்கிறது, ஓங்கப்பாடி கிராமம். இந்த கிராமத்தின் அருகே வேலூரில் இருந்து ஒடுகத்தூர் செல்லும் சாலையின் ஓரத்தில் மிகப்பெரிய பள்ளம் தோண்டிப் போடப்பட்டிருக்கிறது.... மேலும் பார்க்க

Aadhar Card-ல் மாறும் கடைசிப் பெயர்; கடைசி நேரத்தில் ஏற்படும் குழப்பம் - தவிர்ப்பது எப்படி?!

வங்கி கணக்கில் எதாவது மாற்றம், டிக்கெட் பதிவு... எந்த இடத்திற்குச் சென்றாலும் முதலில் கேட்கப்படும் கேள்வி 'ஆதார் இருக்கிறதா?' என்பது தான். இன்று இந்திய மக்களின் வாழ்வில் ஆதார் இன்றியமையாத இடத்தைப் பிட... மேலும் பார்க்க

`வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய கடைசி தேதி ஜூலை 31 இல்ல!' - நீட்டிக்கப்பட்ட தேதி; காரணம் என்ன?

ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய ஜூலை 31-ம் தேதியே கடைசி நாள். ஆனால், இந்த ஆண்டு (2025) கடைசி நாளை செப்டம்பர் 15-ம் தேதிக்கு மாற்றியுள்ளது மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT).வருமான வர... மேலும் பார்க்க

வாணியம்பாடி: கழிவறையின் அவலநிலையைச் சுட்டிக்காட்டிய விகடன்; நடவடிக்கை எடுத்த நகராட்சி!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரம், தோல் தொழிற்சாலைகள் நிறைந்த நெரிசல் மிகுந்த நகராட்சி ஆகும் . பெருகிவரும் மக்கள்தொகை மற்றும் வாகனங்களால் வாணியம்பாடி பேருந்து நிலையம் எப்போதும் நெரிசல் மிகுந்த... மேலும் பார்க்க

'இந்தியா அடுத்து ஜெர்மனியை தாண்டுவது மட்டும் முக்கியமல்ல...' - ஆனந்த் மஹிந்திரா கூறுவது என்ன?

சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகளின் படி, இந்தியா ஜப்பானை முந்தி உலக அளவில் நான்காவது மிகப்பெரிய பொருளாதாரம் என்கிற இடத்தை பிடித்துள்ளது என்று நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர். சுப்பிரமணிய... மேலும் பார்க்க