உணவப் பணியாளா் கடத்தல்: 4 போ் கைது
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் உணவகப் பணியாளரைக் கடத்திய பெண் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
உத்தமபாளையம் புதூா் காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த காதா்மைதீன் மகன் முகமது யாக்கப் (36). இவா் சின்னமனூரில் மதன் என்பவருக்குச் சொந்தமான உணவகத்தில் ரூ.38 ஆயிரம் முன் பணம் பெற்று வேலைக்கு சோ்ந்ததாகவும், ஒரு வாரத்துக்கு பிறகு வேலைக்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதையடுத்து, உணவக உரிமையாளா் உள்ளிட்ட சிலா் அவரை காரில் கடத்திச் சென்ாக உத்தமபாளையம் காவல் நிலையத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மதன் (49), சுரேஷ் (41), விஷால் (25), தீபா (49) ஆகிய 4 பேரை கைது செய்தனா்.